ஐடி துறையில் ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்கும் என்ற பதற்றத்தின் மத்தியிலே ஊழியர்கள் பலரும் இருந்து வருகின்றனர். சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலை அச்சத்தின் மத்தியில், இன்னும் என்ன மாதிரியான சவால்கள் எல்லாம் காத்திருக்கின்றனவோ?
இத்தகைய சவாலான நிலைக்கு மத்தியில் பணி நீக்கம், புதிய பணியமர்த்தல் நிறுத்தம், மூன்லைட்டிங், சம்பள குறைப்பு என பல பிரச்சனைகள் இருந்து வருகின்றன. பல நிறுவனங்களில் எப்போது என்ன அறிவிப்பு வருமோ என்ற அச்சத்திலேயே ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.
நெருக்கடியான நிலை
இந்த நெருக்கடியான நிலையிலும் ஐடி துறையில் அட்ரிஷன் விகிதமானது உச்சத்தில் உள்ளது பலருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இது கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் சுமார் 20% இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் இந்த காலகட்டத்தில் கூட அட்ரிஷன் விகிதம் உச்சத்தில் காணப்படுகின்றது.
பணியமர்த்தல்
உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் உச்சம் எட்டி வந்த நிலையில், ஐடி துறையில் தேவையானது மிகப்பெரிய அளவில் உச்சம் தொட்டு வந்தது. ஐடி துறையில் அதிகரித்த இந்த தேவையின் காரணமாக, பணியமர்த்தலானது மாபெரும் அளவில் இருந்து வருகின்றது. இதற்கிடையில் அட்ரிஷன் விகிதமும் மிக மோசமாக இருந்தது.
அட்ரிஷன் விகிதம்
நடப்பு டிசம்பர் காலாண்டிலேயே 18 - 20% வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் இரண்டாவது காலாண்டிலும் உச்சத்தில் இருந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
இதில் இரண்டாவது காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 27.1% ஆகவும், விப்ரோ நிறுவனத்தில் 23% ஆகவும், டிசிஎஸ் நிறுவனத்தில் 21.5% ஆகவும், ஹெச் சி எல் நிறுவனத்தில் 23.8% ஆகவும் இருந்தது.
பணியமர்த்த யோசனை
ஐடி நிறுவனங்களின் தற்போதைய பணி நீக்கத்தினால் ஜூனியர் முதல் நடுத்தர ஊழியர்கள் வரையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல பெரு நிறுவனங்களிலும் நிலைமை இன்னும் கடுமையாக உள்ளது எனலாம். தற்போது மந்த நிலைக்கு மத்தியில், நிலைமை இன்னும் கடுமையாக உள்ளது.
தாங்களாகவே வெளியேறும் ஊழியர்கள்
குறிப்பாக அவர்கள் புதியதாக பணிக்கு வரும் பிரெஷ்ஷர்கள், பெஞ்ச் ஊழியர்கள் என பல தரப்பினரையும் நிறுவனங்கள் பணியில் அமர்த்த யோசித்து வருகின்றன. இதற்கிடையில் பலரும் தாங்களாகவே விரும்பி வேறு வேலைக்கு செல்வதும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பிரெஷ்ஷர்கள் மத்தியில் இந்த போக்கானது அதிகரித்துள்ளது.
அட்ரிஷன் ஏன் அதிகரிப்பு?
ஐடி துறையில் சம்பள செலவு என்பதே மிகப்பெரிய செலவினமாக இருந்து வருகின்றது. ஆனால் இந்த சவாலான காலகட்டத்கில் சம்பளம் குறைப்பு, போனஸ் குறைப்பு என பல நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. இது இனி பணியமர்த்தப்படவிருக்கும் ஊழியர்களுக்கும் சம்பள குறைப்பு செய்ய வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக திறன் வாய்ந்த ஊழியர்கள் தாங்களாகவே பணியில் இருந்து விலகி வருகின்றனர். இது நிறுவனங்களின் மார்ஜினை அதிகரிக்க உதவும் என்றாலும், அட்ரிஷன் விகிதம் அதிகரிக்கவும் வழிவகுத்துள்ளது.
எப்போது அட்ரிஷன் குறையும்?
பல ஐடி நிறுவனங்களும் ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள பற்பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. இது வரவிருக்கும காலாண்டுகளில் அட்ரிஷன் விகிதம் குறைய வழிவகுக்கலாம். ஐடி துறையில் தேவையானது சரிந்து வரும் நிலையில் இதுவும் அட்ரிஷன் விகிதம் குறைய வழிவகுக்கலாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications