Engineering Services நிறுவனங்களை வாங்கி குவிக்கும் முன்னணி ஐடி நிறுவனங்கள்.. என்ன காரணமா இருக்கும்?

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான காக்னிசன்ட் (Cognizant), இன்போசிஸ், ஹெச்சிஎல் ஆகியவை அண்மை காலமாக பெருமளவில் இன்ஜினியரிங் சேவை நிறுவனங்களை கையகப்படுத்தி வருகின்றன. அதிகரிக்கும் போட்டியை சமன்படுத்தவும், தங்களது வருவாயை விரிவுபடுத்தவும் ஐடி நிறுவனங்கள் இந்த புதிய பாணியை பின்பற்றுவது தெரியவந்துள்ளது.

காக்னிசன்ட் நிறுவனம் அண்மையில் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரக்கூடிய பெல்கான் (Belcan) என்ற மிகப்பெரிய பொறியியல் சேவை நிறுவனத்தை 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்து கைப்பற்றியது. காக்னிசன்ட் தலைமை செயல் அதிகாரி ரவிக்குமார் பொறுப்பேற்ற பிறகு இந்த நிறுவனம் கையகப்படுத்தக்கூடிய இரண்டாவது பொறியியல் நிறுவனம் இது.

Engineering Services நிறுவனங்களை வாங்கி குவிக்கும் முன்னணி ஐடி நிறுவனங்கள்.. என்ன காரணமா இருக்கும்?

இதேபோல பல்வேறு ஐடி நிறுவனங்களும் பொறியியல் சேவை துறையை சார்ந்த நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் இன்போசிஸ் நிறுவனம் ஜெர்மனியை அடிப்படையாகக் கொண்ட இன்டெக் (in-tech) என்ற இன்ஜினியரிங் டெக்னாலஜி நிறுவனத்தை கைப்பற்றியது.

அதாவது பொறியியல் ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறையை சேர்ந்த இந்த நிறுவனத்தை 480 மில்லியன் டாலர்களுக்கு இன்போசிஸ் நிறுவனம் வாங்கியது. ஏற்கனவே ஜனவரி மாதம் இன்போசிஸ் இன் செமி (InSemi) என்ற செமி கண்டக்டர் நிறுவனத்தை 33 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.

தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது அசெஞ்சர் (Accenture) நிறுவனமும் யுஎம்எல்ஏயூடி (umlaut) என்ற நிறுவனத்தை ஒரு பில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது. ஹெச்சிஎல்(hcl) நிறுவனம் 350 மில்லியன் டாலர்களுக்கு ஒரு பொறியியல் சேவை நிறுவனத்தையும் டெக் மகேந்திரா(tech mahindra) நிறுவனம் சிடிசி (Ctc)என்ற நிறுவனத்தை 280 மில்லியன் டாலர்களுக்கும் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதே போல கேப் ஜெமினி உள்ளிட்ட நிறுவனங்களும் கூட பொறியியல் சேவை நிறுவனங்களை வாங்கியுள்ளன.

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பொறியியல் துறை சார்ந்த ஆய்வு மற்றும் மேம்பாடு மூன்று மடங்கு வளர்ச்சி அடையும் என நம்புவதாக இஐஐஆர் ட்ரெண்ட் (Eiir trend) நிறுவனத்தின் தலைவரான பரிக் ஜெயின் தெரிவித்துள்ளார்.

10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஐடி துறை எப்படி வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு துறையாக இருந்ததோ தற்போது இன்ஜினியரிங் அதாவது பொறியியல் சேவை சார்ந்த துறைகள் அந்த இடத்தில் இருக்கின்றன. எனவே அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் பொறியியல் சேவை நிறுவனங்கள் மிகப்பெரிய நிறுவனங்களாக உருவாகி இருக்கும் எனவே தான் ஐடி நிறுவனங்கள் தற்போது இவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன என கூறுகிறார்.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+