கோவை: தமிழ்நாட்டில் பாதுகாப்பு துறை சார்ந்த உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை தயாரிக்கும் மையமாக கோவையை மாற்றும் பொருட்டு அங்கே இரண்டு தொழிற்பூங்காக்களை தமிழக அரசு அறிவித்தது. அதன் தற்போதைய நிலவரம் என்ன..?
தமிழ்நாட்டில் அமைக்கப்படும் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ-விடம் உள்ளது. இந்த நிறுவனம் கோவை மாவட்டத்தில் ராணுவ தொழிற்பூங்கா அமைக்கும் பணிகளை தொடங்கி நடத்தி வருகிறது.

முதல்கட்டமான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோவை மாவட்டம் வாரப்பட்டி பகுதியில் 350 ஏக்கரில் பாதுகாப்பு தொழிற்சாலைகளை அமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இங்கே ஆலைகளை அமைப்பதற்கான விண்ணப்பங்களை தொழில்நிறுவனங்கள் வழங்கலாம் என ஏற்கனவே அறிவித்திருந்தது.
அந்த வகையில் வாரப்பட்டியில் பாதுகாப்புத் துறை தொழிற்பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டமிடப்பட்டுள்ள 350 ஏக்கரில் தற்போது வரை 100 ஏக்கர் இடங்களை ஒதுக்குவதற்கு முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள இடங்களுக்கு விண்ணப்பம் அளிப்பதில் நிறுவனம் சற்றே தயக்கம் காட்டுவது தெரிய வந்துள்ளது. கோவையில் சரியான விலையில் நிலங்கள் கிடைப்பது சவாலாக உள்ளது என்கின்றனர் இங்கே செயல்படும் எம்.எஸ்.எம்.ஈ நிறுவனங்களின் உரிமையாளர்கள்.
கோவையில் தொழில் தொடங்க குறிப்பாக தொழிற்பூங்காவில் முதலீடு செய்ய ஆர்வம் இருந்தாலும் நிலத்தின் விலை உள்ளிட்ட சவால்கள் அதை தடுத்து விடுகின்றன என கூறுகின்றனர். கோவையில் இரண்டு இடங்களில் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட தொழில் பூங்காவை நிறுவுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது ஒன்று வாரப்பட்டி மற்றொன்று சூலூர்.

சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ளதை போன்ற பெரிய அளவிலான தொழில் பூங்காக்கள் கோவையில் இல்லாமல் இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.
அரசு இங்கே தொழில் செய்ய வரும் நிறுவனங்கள் விரைவாக நிலங்களை கையகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், இதன் மூலமே அரசு நினைத்தபடி இந்த இடம் பெரிய தொழில் பூங்காவாக மாறும் எனவும் எம்.எஸ்.எம்.ஈ துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications