சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக குழந்தைகள் பிறப்பு விகிதம் 9 லட்சத்திற்கும் கீழ் குறைந்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே குழந்தைகள் பிறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறப்பு 8, 42,412 ஆக இருக்கிறது. 2024க்கு முன்பு வரை இருந்த கடைசி ஐந்தாண்டு காலத்தில் குழந்தைகள் பிறப்பு
விகிதம் 9 லட்சம் என்ற எண்ணிக்கைக்கு மேலே இருந்தது.
முதன்முறையாக அந்த எண்ணிக்கை 9 லட்சத்திற்கும் கீழ் சென்றுள்ளது. 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 9 ,02,306 ஆக இருந்து 2024இல் 6.6% குறைந்து 8,42,412 என சரிவடைந்துள்ளது. முந்தைய ஆண்டு மாநிலத்தின் மொத்த குழந்தைகள் பிறப்பு விகிதம் 11.7 ஆக இருந்து 2024 10.9 என குறைந்துள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள தரவுகளில் இந்த விவரங்கள் வெளி வந்துள்ளன.

தமிழ்நாட்டில் பெண்கள் வாழ்நாளில் குழந்தைகள் பிறக்கும் சராசரி விகிதம் Total Fertility Rate என கணக்கீடு செய்யப்படுகிறது. அதுவும் 1.4 என குறைந்திருக்கிறது. சர்வதேச அளவில் வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் எல்லாம் குழந்தை பிறப்பு விகிதம் கணிசமான அளவு குறைந்து வருகிறது. அதே போக்கையே தற்போது தமிழ்நாட்டில் காண முடிகிறது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
2024இலும் இந்த விகிதம் கணிசமான அளவு குறைந்து இருப்பதை நாம் காண முடிகிறது என்றும் அடுத்த சில மாதங்களில் ஆண்டு அறிக்கை வெளிவந்துவிடும் அதில் முழுமையான தரவுகள் நமக்கு தென்பட்டு விடும் என தெரிவித்துள்ளார். குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் ஆய்வு செய்ய வேண்டும் என அவர்
தெரிவித்துள்ளார்.
இவ்வாறு குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைகிறது எனும்போது பிற்காலத்தில் வயதான மக்கள் தொகை அதிகமாக இருக்கும் என்பதை நாம் கவனிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். வயதான மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க அவர்களை பராமரிப்பதற்கான செலவினங்கள் அதிகரிக்கும். அதே நேரத்தில் நாட்டில் வேலை செய்யும் வயதுக்குள் இருக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
வேலூரில் செயல்பட்டு வரக்கூடிய சிஎம்சி கல்லூரியின் பேராசிரியர் ஜேக்கப் ஜான் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்ததற்கு மருத்துவர் ரீதியான காரணங்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில் அதன் விகிதம் குறைவு என்கிறார். தமிழ்நாட்டில் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு காரணிகளே குழந்தை பிறப்பு விகிதம் குறைவதற்கு ஒரு காரணம் எனத்
தெரிவிக்கிறார்.
மேற்கத்திய நாடுகளில் இதே போன்ற ஒரு சூழல் ஏற்பட்டபோது அவர்கள் அதனை தடுக்க ஏதுவாக நடவடிக்கை எடுத்தனர். தற்போது அங்கே முன்னேற்றங்களை நாம் காண முடிகிறது. அதேபோன்ற ஒரு நடவடிக்கையை தமிழ்நாடு அரசும் எடுக்க வேண்டும் என ஜேக்கப் ஜான் குறிப்பிடுகிறார்.
அடுத்த 15 ஆண்டுகளுக்குள் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என்றால் பின்னாளில் இது பிரச்சினையாக முடியும் எனக் கூறியுள்ளார். தற்போது சுகாதார வசதிகள் அதிகரித்து விட்டதால் மக்களின் வாழ்நாள் காலம் அதிகரித்து விட்டது. எனவே எதிர்காலங்களில் மக்களின் ஆயுள் கூட போகிறது அதாவது வயதான மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்க போகிறது, தற்போது குழந்தை பிறப்பு வீதமும் குறைந்துவிட்டால் அரசுக்கு இது பெரிய சவாலாக மாறிவிடும்.
எனவே இதனை எதிர்கொள்ள ஏதுவான நடவடிக்கைகளை தற்போது இருந்தே அரசு தொடங்க வேண்டும் என்று அறிவுரையும் அவர் வழங்குகிறார்.
Story Written By: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications