டெல்லி: இந்தியாவில் இயங்கி வரக்கூடிய பன்னாட்டு நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டில் ஊழியர்களுக்கு பெரிய அளவிலான ஊதிய உயர்வை வழங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஜனவரி முதல் டிசம்பர் என்ற கேலண்டரில் தான் இயங்குகின்றன. எனவே ஊதிய உயர்வு , பதவி உயர்வு ஆகிய அறிவிப்புகளை ஜனவரியில் தான் வெளியிடும். இந்நிலையில் டெல்லாய்ட் நிறுவனம் பன்னாட்டு நிறுவன ஊழியர்களிடம் ஆய்வு நடத்தி அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு இருக்கிறது.

இது தொடர்பாக எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த ஆண்டு ஊழியர்களுக்கு 9 சதவீதத்திலிருந்து ஊதிய உயர்வு வழங்கிய பன்னாட்டு நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் அதனை 8.8 சதவீதம் என குறைத்துவிட்டன.
மேலும் பெரிய அளவிலான ஊதிய உயர்வு வழங்குவதை பன்னாட்டு நிறுவனங்கள் தவிர்த்து இருப்பதாக தெரிய வருகிறது. இதனால் இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
2025 ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார ஸ்திரமற்ற தன்மை ஏற்படலாம் என்ற ஒரு சூழல் நிலவுவதே பன்னாட்டு நிறுவனங்கள் ஊழியர்களுக்கு குறைந்த விகிதத்தில் ஊதிய உயர்வு அளித்ததற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
அதே வேளையில் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் ஜிசிசி மையங்கள் ஊழியர்களுக்கு அதிக அளவில் ஊதிய உயர்வு அளித்துள்ளன. அதாவது ஜிசிசி மையங்கள் 9.1 சதவீதம் வரை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
கிட்டத்தட்ட நூறு நிறுவனங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு இந்த ஆண்டில் எதிர்பார்த்த அளவு இருக்காது என தெரியவந்துள்ளது. அண்மையில் தான் இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் தங்களுடைய ஜூனியர் நிலையிலான ஊழியர்களுக்கு பகுதியளவு ஊதிய உயர்வு அறிவித்தது.
அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஜூனியர் நிலையிலான ஊழியர்கள் 1 முதல் 2 சதவீதம் வரை மட்டுமே ஊதிய உயர்வு பெற்றனர்.
இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதை தள்ளி வைத்துள்ளது. இவ்வாறு இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்களும் இந்தியாவில் வந்து இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமலும் ,குறைந்த விகிதத்தில் ஊதிய உயர்வும் வழங்கி இருப்பது சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நிறுவனங்களும் இதனை பின்பற்றுமா என ஊழியர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான ஆண்டை கணக்கில் கொண்டு தான் ஊதிய உயர்வு அறிவிப்புகளை வெளியிடும். எனவே இன்னும் இரண்டு மாதங்களில் அந்த நிலவரம் தெரிந்து விடும்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications