இந்தியாவில் செயல்படக்கூடிய ஐடி நிறுவனங்களில் திடீரென தலைமை மாற்றங்கள் ஏற்படும். அப்படி இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸில் தலைமை மாற்றம் ஏற்பட்டதால் மிகப் பெரிய பிரச்சனை உண்டான. நாராயணமூர்த்தி , நந்தன் நீலகேனி உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து தான் இன்போசிஸ் என்ற ஒரு நிறுவனத்தையே கட்டி எழுப்பினார்கள் .
இன்போசிஸ் நிறுவன தலைமை பொறுப்புகளும் மாறி மாறி இவர்கள் வசேம் இருந்தது. இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு திடீரென இன்போசிஸ் நிறுவனத்தில் ஒரு தலைமை மாற்றம் ஏற்பட்டது. அதாவது இன்போசிஸ் நிறுவனத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒரு நபர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார் . அவர்தான் விஷால் சிக்கா. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பிஎச்டி முடித்தவர். அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் புகழ்பெற்றவர்.

இன்போசிஸ் நிறுவனத்தில் படிப்படியாக மேல் வந்து உயர் பதவிக்கு பலரும் காத்திருந்த சூழலில் தான் திடீரென சிக்காவை தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்தனர். இது நிறுவனத்தில் பணி செய்த ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இவர் முழுக்க முழுக்க அமெரிக்க ஐடி துறையில் இருந்து வந்தவர். சிக்கா இன்போசிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்ற உடனே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சந்தையில் உயரத் தொடங்கியது .
விஷால் சிக்கா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகிப்பது இன்போசிஸ் நிறுவனங்களுள் ஒருவரான நாராயணமூர்த்திக்கு துளியும் விருப்பமில்லை. நாராயணமூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு பதவிகளில் இருந்து விலகி இருந்தாரே தவிர நிறுவனம் தொடர்ந்து அவருடைய முடிவுகளையும் ஆலோசனைகளையும் கேட்டு தான் செயல்பட்டு வந்தது .ஏனெனில் இன்போசிஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் மிகவும் முக்கியமானவர் நாராயணமூர்த்தி. அவருக்கு விஷால் சிக்கா தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதில் உடன்பாடு இல்லை.
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு விஷால் சிக்காவிற்கு இன்போசிஸ் நிறுவனம் ஆண்டுக்கு 17.38 கோடி ரூபாயை ஊதியமாக வழங்குவதாக அறிவித்தது. இதன் மூலம் இன்போசிஸ் வரலாற்றிலேயே அதிக சம்பளம் பெறும் தலைமை செயல் அதிகாரி என்ற பெருமை சிக்காவுக்கு கிடைத்தது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாத நாராயணமூர்த்தி தலைமை செயல் அதிகாரி பதவிக்கு இவ்வளவு அதிக சம்பளம் வழங்குவதா என பொதுவெளியிலேயே விமர்சனம் செய்ய தொடங்கினார்.

இது இன்போசிஸ் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என வார்த்தை மோதல்களை தொடங்கினார். அந்த சூழலில் தான் 2015 ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனம் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பனாயா என்ற நிறுவனத்தை 200 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது. விஷால் சிக்கா தலைமையில் தான் இந்த பரிவர்த்தனை என்பது நடந்தது. ஆனால் குறைந்த மதிப்பு கொண்ட நிறுவனத்தை அதிக மதிப்பிற்கு விஷால் சிக்கா வாங்கிவிட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டு இழந்தது. எனவே நாராயண மூர்த்தி இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கையை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என கூறினார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் வாரியக் குழு இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தது. இதனால் கோபமடைந்த நாராயணமூர்த்தி இன்போசிஸ் வாரிய குழுவிற்கு மிக காட்டமான ஒரு மின்னஞ்சலை அனுப்பினார். அதில் இன்போசிஸ் நிறுவனத்தின் அடிப்படை கொள்கையே வெளிப்படை தன்மை என்பது தான் ஆனால் அதுவே தற்போது இல்லை என அவர் கடுமையான வார்த்தைகளால் சாடி இருந்தார்.
இன்போசிஸ் வாரிய குழு உறுப்பினர்களுக்கும் நாராயணமூர்த்திக்கும் இடையிலான மோதல் பொதுவெளியில் வெளியாகி பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியது. தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்ட விஷால் சிக்கா 2017 ஆகஸ்ட் மாதம் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்தார். அப்போது அவர் வழங்கிய ராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட முறையில் தன் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன இதன் காரணமாக என்னால் நிறுவனத்திற்காக முழுமையாக வேலை செய்ய முடியவில்லை எனக் கூறி இந்தியாவை வீட்டை வெளியேறினார்.
விஷால் சிக்கா வெளியேறியதை அடுத்து நிறுவனர்களுள் ஒருவரான நந்தன் நீலகேனி மீண்டும் இன்போசிஸ் தலைமை பொறுப்பை ஏற்றார். இன்போசிஸ் நிறுவனத்தில் பல தலைமை செயல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருந்தாலும் விஷால் சிக்கா பதவி வகித்த காலம் இன்போசிஸ் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications