இந்திய தலைநகராக இருக்கும் டெல்லியின் முக்கிய அடையாளமாக இருக்கும் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 1927 இல் 'கவுன்சில் ஹவுஸ்' என வடிவமைக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களுக்கும் இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. இதனால் பலருக்கும் இடமில்லாமல் உள்ளது.
இந்த நிலையில் தற்போது பயன்படுத்தப்படும் நாடாளுமன்ற கட்டிடத்தில் 552 உறுப்பினர்கள் அமரலாம். லோக்சபாவில் 552 எம்.பி.க்கள் மற்றும் சென்டரல் ஹாலில் 436 பேர் அமரலாம். இரு அவைகளின் கூட்டுக் கூட்டங்களின் போது, இருக்கைகளுக்கு மத்தியில் இருக்கும் இடத்தில் சுமார் 200 தற்காலிக இருக்கைகள் சேர்க்கப்படுவதால் பல்வேறு பாதுகாப்புக் கவலைகளை எழுப்புகிறது.

இது மட்டும் அல்லாமல் 1927 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட கட்டிடம் என்பதால் நில அதிர்வு மற்றும் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் முன்னிலையில் மிகவும் பின்தங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேலை செய்வதற்கு மிகக் குறைந்த இடவசதி மட்டுமே உள்ளது.
இந்த நிலையில் தான் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பல எதிர்ப்புகள் இருந்தாலும் பிரதமர் மோடி 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். சுமார் 970 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடிகொண்ட முக்கோண வடிவிலான கட்டிடத்தை மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட கட்டிடம் ஜூன் 23 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
இந்த சென்ட்ரல் விஸ்டா நாடாளுமன்ற கட்டிடத்தில் லோக்சபா உட்புறங்களில் தேசிய பறவையான மயில்-ம் ராஜ்யசபா உட்புறங்களில் தேசிய மலர் தாமரை அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முற்றத்தில் தேசிய மர ஆலமரம் கொண்டு இருக்கும்.

புதிய கட்டிடத்தின் வடிவமைப்பு முக்கோண வடிவம் கொண்டது. இது லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டு முக்கிய அறைகளுடன் உள்ளது. சுமார் 65,000 சதுர மீட்டர் கட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் மக்களவைக்கு பச்சை மற்றும் ராஜ்யசபாவிற்கு மெரூன் நிறத்தில் பெயின்ட் பூசப்பட்டு உள்ளது.
புதிய நாடாளுமன்றத்தில் சுமார் 888 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர முடியும், ராஜ்யசபா-வில் 384 எம்.பி.க்கள் அமர முடியும். இதன் மூலம் மக்களவையில் இரு அவை கூட்டம் நடைபெற எவ்விதமான பிரச்சனையும் இருக்காது. புதிய நாடாளுமன்றத்தின் வீடியோவை பிரதமர் தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டு உள்ளார்.
The new Parliament building will make every Indian proud. This video offers a glimpse of this iconic building. I have a special request- share this video with your own voice-over, which conveys your thoughts. I will re-Tweet some of them. Don’t forget to use #MyParliamentMyPride. pic.twitter.com/yEt4F38e8E
— Narendra Modi (@narendramodi) May 26, 2023
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications