டெல்லி: நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் ஒரே சமயத்தில்தான் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் மட்டும் ஏன் ஒரு நாள் முன்னதாகவே சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது என எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? அதற்கான விடையை தான் இந்த கட்டுரையில் நாம் காண போகிறோம்.
1947 ஜூலை 18ஆம் தேதி இந்திய சுதந்திர சட்டம் 1947 நிறுவப்பட்டது. 1947, ஆகஸ்ட் 15ஆம் தேதி இரண்டு சுதந்திர நாடுகள் இந்தியாவில் உருவாகும் ஒன்று இந்தியா என்றும் மற்றொன்று பாகிஸ்தான் என்றும் அறியப்படும் என இந்த சட்டம் கூறுகிறது. இப்படி ஒரே தேதியில் சுதந்திரம் பெற்ற இரண்டு நாடுகள் ஏன் அடுத்தடுத்த தினங்களில் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன என்பதன் பின்னணியில் சுவாரஸ்யமான விஷயங்கள் சொல்லப்படுகின்றன.

பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாகவும் பிரிட்டன்ம் அரசின் ஆட்சி பிரதிநிதியாகவும் அப்போது இருந்தவர் மவுண்ட்பேட்டன். இவர் தான் இரு நாடுகளிலும் அதிகார மாற்றத்தை கொண்டு வந்தவர். 1948க்கு முன் அதிகார மாற்றம் நிகழ வேண்டும் என முடிவு செய்த போது, அதனை விரைவுபடுத்தி 1947இல் குறிப்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதியே சுதந்திரம் வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்தவர் மவுண்ட்பேட்டன்.
எனவே ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரத்தை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மவுண்ட் பேட்டன் ஒரே சமயத்தில் இரு நாடுகளுக்கும் அதிகார மாற்றத்தை வழங்க முடியாது. முதலில் இந்தியாவில் அதிகார மாற்றம் நிகழ்ந்தால் அவர் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னல் ஜெனரல் ஆகிவிடுவார். எனவே தான் அவர் முதலில் கராச்சிக்கு சென்று அதாவது ஆகஸ்ட் 14 1947 அன்று கராச்சிக்கு சென்று முகமது அலி ஜின்னாவை சந்தித்து, அதிகாரத்தை மாற்றி அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இந்தியா வந்த மவுண்ட்பேட்டன் நள்ளிரவில் அதிகார மாற்றம் செய்தாராம்.
எனவே முதலில் பாகிஸ்தான் தலைவர்களும் , மக்களும் ஆகஸ்ட் 15ஆம் தேதியை தான் சுதந்திர தினமாக கொண்டாடினர். இந்நிலையில் தான் 1948இல் பாகிஸ்தானின் முதல் பிரதமரான லியாகத் அலி கான், அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். அப்போது சுதந்திர தினம் கொண்டாட்டம் தொடர்பாக பேச்சுகள் எழவே.
அமைச்சர்கள் இந்தியாவுக்கு முன்னதாக பாகிஸ்தான் தனது சுதந்திரத்தை கொண்டாட வேண்டும் என்று முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஜின்னாவுக்கும் தெரிவிக்கப்பட்டு அவர் ஒப்புதலின் பேரில் ஆகஸ்ட் 14 சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்டு 1948 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகையின் முக்கிய நாளான 27ஆவது நாளுடன் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒத்து போனதால் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்திய சுதந்திர சட்டம் 1947ஐ பொறுத்தவரை ஆகஸ்ட் 15 தான் பாகிஸ்தான் சுதந்திர தினம், அந்த நாளில் அந்நாட்டின் முதல் அமைச்சரவை பதவியேற்பு, சுதந்திர தினம் அஞ்சல் தலை வெளியீடு ஆகியவை நடந்தன. ஆனால் அடுத்த ஆண்டு முதல் ஆட்சியாளர்கள் பல காரணங்களை முன் வைத்து 14ஆம் தேதியை சுதந்திர தினமாக அறிவித்து கொண்டாடுகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

பற்றி எரியும் இந்தியாவின் அண்டை நாடுகள்!! பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே நேரடி போர் தொடக்கம்!!

திடீரென இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் டிரோன்!! 3 நாட்களில் 2ஆவது சம்பவம்!!

ஆசியாவில் அடுத்த போர்.. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மத்தியில் 'ஓப்பன் வார்'.. புடின் சொன்ன ஒரு வார்த்தை..!!

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

பட்ஜெட் மாசத்துல மத்திய அரசுக்கு பணமழை: 8% உயர்ந்த ஜிஎஸ்டி வருவாய்!!

H1B விசா: $100000 கட்டணம் செலுத்த தயங்கும் அமெரிக்க நிறுவனங்கள்!! இந்திய டெக்கிகளே கவனம்!!

விரிசலடைந்த இந்தியா - கனடா உறவை மீட்கும் முயற்சி: கனடா பிரதமர் கார்னி இந்தியா வருகை!!

ஷிகர் தவான் வழக்கில் முக்கிய திருப்பம்!! ரூ.5.6 கோடியை திரும்ப ஒப்படைக்க முன்னாள் மனைவிக்கு உத்தரவு

நினைத்ததை சாதித்த டிரம்ப்!! ரஷ்யாவுக்கு குட்பை சொல்லி வெனிசுலாவுக்கு வணக்கம் வைத்த இந்தியா!!

பெண் குழந்தை வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும் அரசு பணம்! எப்படி?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!



Click it and Unblock the Notifications