மும்பை: 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தினம். பாகிஸ்தானை சேர்ந்த லக்சர் இ தொய்பா பயங்கரவாதிகள் அரபிக்கடல் வழியாக படகு மூலம் மும்பையில் நுழைந்து மிகப்பெரிய தாக்குதலை நிகழ்த்தினர்.
பயங்கரவாதிகள் மும்பையின் புகழ்பெற்ற டாடா குழுமத்திற்கு சொந்தமான தாஜ் ஹோட்டலுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். இதில் பல்வேறு வெளிநாட்டவர்களும் அடங்குவர்.

மொத்தமாக இந்த 26/ 11 தாக்குதலின் போது 166 பேர் உயிரிழந்தனர். இதில் 33 பேர் தாஜ் ஹோட்டலை சேர்ந்த ஊழியர்கள். அதுமட்டுமின்றி ஊழியர்கள், ஹோட்டலில் தங்கி இருந்தவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்து விட்டார்கள் என்ற தகவல் கிடைத்த உடனே ரத்தன் டாடா தாஜ் ஹோட்டலுக்கு விரைந்தார்.
அப்போது அவருக்கு 70 வயது , கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அவர் தாஜ் ஹோட்டல் வாசலிலேயே இருந்து பாதுகாப்பு படையினர் உள்ளே நுழைந்து பயங்கரவாதிகளை பிடிப்பதற்கும், ஹோட்டலுக்குள் சிக்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணிகளையும் முழுமையாக உடனிருந்து கவனித்து வந்தார். இதனை தாஜ் ஹோட்டல் ஊழியர்களும் அந்த பகுதியை சேர்ந்த பாதுகாப்பு படையினரும் இன்னமும் கூட நினைவு கூறுகிறார்கள். இந்த தாக்குதலில் 100 ஆண்டு பாரம்பரியம் கொண்ட தாஜ் ஹோட்டல் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்தத.
இதன் பிறகு தாஜ் ஹோட்டல் மீண்டும் திறக்கப்படாது என்றே பலரும் கூறினர். ஆனால் ரத்தன் டாடா அதனை பொய் என மாற்றி காட்டினார். தாக்குதலில் கொல்லப்பட்ட ஊழியர்களின் குடும்பங்களுக்கு வாழ்நாள் சம்பளத்தை இழப்பீடாக வழங்கினார். காயமடைந்த ஊழியர்களுக்கு அவர்கள் சிகிச்சை பெறுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ரத்தன் டாடா வழங்கினார்.
அது மட்டும் இன்றி ஹோட்டலில் தங்கி இருந்து காயமடைந்த விருந்தினர்களுக்கு தேவையான உதவிகளையும் ரத்தன் டாடா வழங்கினார். தாஜ் ஹோட்டலை சுற்றி இருந்த சிறு சிறு வியாபாரிகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளையும் டாடா குழுமம் வழங்கியது.
தாக்குதல் நடந்து முடிந்த 21 நாட்களுக்குள்ளேயே தாஜ் ஹோட்டலை பழையபடி திறந்தார். ஹோட்டல் சீரமைப்பு பணிகளை தானே நேரடியாக நின்று மேற்கொண்டார். அதேபோல எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நிகழாத வண்ணம் ஹோட்டலில் தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் அவர் கொண்டு வந்தார். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டது தாஜ் பொது சேவை நல அறக்கட்டளை ஆகும். மேலும் தாக்குதல் நடந்த ஒரு வருடம் கழித்து 2009 ஆம் ஆண்டில் உயிரிழந்த ஊழியர்களின் ஊழியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவுச் சின்னத்தையும் அவர் திறந்து வைத்தார்.
2020 ஆம் ஆண்டு ரத்தன் டாடா இந்த தாக்குதல் தினத்தன்று ஒரு பதிவினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ”12 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த தாக்குதலை நம்மால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. ஆனால் இந்த தினம் மற்றொன்றை நமக்கு நினைவுபடுத்துகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து வித்தியாசங்களையும் மறந்து மக்கள் ஒன்று கூடினர்” என்பதை அவர் தன்னுடைய பதிவில் சுட்டிக்காட்டி இருந்தார். நம் அனைவரிடம் இருந்த அந்த ஒற்றுமை தொடரும் என நான் நம்புகிறேன் என ரத்தன் டாடா பதிவு செய்திருந்தார்.
அண்மையில் ரத்தன் டாடா காலமானதை அடுத்து தாஜ் ஹோட்டல் ஊழியர்கள், இக்கட்டான தருணத்தில் அவர் எப்படி அனைவருக்கும் பக்கபலமாக இருந்தார் என்பதை நினைவு கூர்ந்தனர்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications