அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்து வந்த வேளையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிந்ததில் இருந்து அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தது. இதனால் ரூபாய் மதிப்பு மோசமான திங்கட்கிழமை வர்த்தகத்தில் வரலாற்று சரிவைப் பதிவு செய்துள்ளது.
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வரலாற்று சரிவுக்கு என்ன காரணம்..? இதன் மூலம் மக்களுக்கு என்ன பாதிப்பு..?!
இந்திய ரூபாய் மதிப்பு
இந்திய ரூபாய் மதிப்பு மட்டும் அல்லாமல் ஜப்பான் யென் முதல் சீனா யுவான் வரையில் அனைத்து முக்கிய வர்த்தக நாணயங்களின் சரிவுக்கு மிக முக்கியமான காரணம் அமெரிக்காவின் மே மாத பணவீக்கம் தான். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அமெரிக்கப் பணவீக்க தரவுகள் சர்வதேச முதலீட்டு சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது.
அமெரிக்காவின் மே மாத பணவீக்கம்
வல்லரசு நாடான அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் அந்நாட்டின் பணவீக்கம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் 40 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது. டிசம்பர் 1981 க்குப் பின் அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்கம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மே 2022ல் எரிபொருள் விலை சுமார் 34.6% உயர்ந்துள்ளது.
பொருளாதார, வர்த்தக வளர்ச்சி
இந்தியாவாக இருந்தாலும் சரி அமெரிக்காவாக இருந்தாலும் சரி பணவீக்கம் உயர்ந்தால் பொருளாதார, வர்த்தக வளர்ச்சியின் வேகம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும். இதைத் தொடர்ந்து கட்டுக்குள்ள வைக்க ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகள் நாணய கொள்கையில் வட்டி விகிதத்தை மாற்றி, பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
பெடரல் ரிசர்வ்
இதன் வாயிலாக அடுத்தச் சில நாட்களில் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டியை கடுமையான உயர்த்துவது உறுதியாகியுள்ளது. அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தினால் சர்வதேச சந்தையில் இருக்கும் டாலர் முதலீடுகள் வெளியேறி அமெரிக்கப் பத்திர சந்தைக்குள்ள நுழையும்.
திங்கட்கிழமை வர்த்தகம்
இதன் ஆரம்பமே இன்றைய வர்த்தகம், திங்கட்கிழமை வர்த்தகத்தில் டாலர் இன்டெக்ஸ் 104.48 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் இந்தியச் சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடுகள் இன்று வெளியேறத் துவங்கியுள்ளதால் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 78.27 வரையில் சரிந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
ரூபாய் மதிப்பு சரியும் காரணத்தால் இந்தியா இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களின் விலை அதிகரிக்கும், இதில் கச்சா எண்ணெய் முதல் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் வரையில் அனைத்தும் அடங்கும்.
இறக்குமதி பொருட்கள்
இதேவேளையில் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பாதிக்கும். இது சப்ளை செயின்-ஐ பாதிப்பது மட்டும் அல்லாமல் இறக்குமதி பொருட்களின் விலையை உயர்த்தும். இது கட்டாயம் மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications