ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு பணி கிடையாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பினை வழங்கியுள்ளது.
இரண்டு குழந்தைகள் கொள்கை: ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவையில் கடந்த 1989ம் ஆண்டு 'இரண்டு குழந்தைகள் கொள்கை' என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் அரசுப்பணி பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டனர்.

2002இல் வழக்கு தள்ளுபடி: ராஜஸ்தான் மாநில அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர் ராம்ஜி லால் என்பவர் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 2017 ஜனவரியில் பாதுகாப்புப் படையில் இருந்து ஓய்வு பெற்ற ராம்ஜி லால், ராஜஸ்தான் காவல்துறையில் கான்ஸ்டபிள் பதவிக்கு 2018 மே மாதம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்ததால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதனை அடுத்து இரண்டு குழந்தைகள் கொள்கை சட்டத்தை எதிர்த்து ராம்ஜி லால் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ராம்ஜி லாலின் வழக்கை 2022இல் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராம்ஜி லால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அவரது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், தீபங்கர் தத்தா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட அமர்வு முக்கியமான தீர்ப்பை வழங்கியது.
சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு: அதாவது 2022இல் ராம்ஜி லாலின் மனுவை தள்ளுபடி செய்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என ஆணையிட்ட உச்சநீதிமன்றம், 'ராஜஸ்தான் அரசு கொண்டு வந்த 'இரண்டு குழந்தைகள் கொள்கை' தொடர்பான சட்டம் செல்லும் என கூறியது.
இந்த சட்டம் பாரபட்சமானது அல்ல என்றும் , அரசியலமைப்பை மீறியது அல்ல என்றும் தெரிவித்த உச்சநீதிமன்றம், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்தில் தவறு ஏதுமில்லை என தெரிவித்தது.
Story Written by : Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications