லடாக்: உலகிலேயே மிக உயரமான இடத்தில் சுரங்கப்பாதையை இந்தியா கட்டமைக்கிறது. குறிப்பாக ராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இந்த பாதை கட்டப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
லடாக்கில் கட்டப்படும் இந்த ஷின்குன் லா சுரங்கப்பாதை ராணுவ ரீதியாக இந்தியாவிற்கு மிக முக்கியமான ஒரு சுரங்கப் பாதையாக அமைக்கப்பட இருக்கிறது. நிலத்தில் இருந்து 15,800 அடி உயரத்தில் கட்டப்படும் இந்த சுரங்கப்பாதை பணிகள் முடிவடையும் போது உலகிலேயே மிக உயரமான இடத்தில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை என்ற பெருமையை பெறும். இதனை பயன்படுத்தி பாதுகாப்பு படையினர் ராணுவ உபகரணங்களை மிக எளிதாக அவர்களுக்கு தேவையான இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும் என சொல்லப்படுகிறது.

இந்த சுரங்கப்பாதை இமாச்சல பிரதேசத்தையும் லடாக்கையும் இணைப்பதால், லடாக்கின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஷின்குன் லா சுரங்கப்பாதை கட்டுவதற்கான திட்டத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1681 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்ட பணிகளானது நடைபெறுகிறது. எல்லை சாலை அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த கட்டுமான பணியினை மேற்கொள்ள உள்ளனர்.
கிழக்கு லடாக்கில் சீனாவுக்கும் இந்தியாவிற்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்படும் நிலையில் இந்தப் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பது ராணுவத்திற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 13 ஆயிரம் அடிக்கு மேல் உயரத்தில் 825 கோடி செலவில் கட்டப்பட்ட சிலா சுரங்கப்பாதை கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது. பொதுவாக இதுபோன்ற எல்லைப் பகுதிகளில் கட்டப்படும் சுரங்கப்பாதைகளில் வெடிமருந்துகள் ,ஏவுகணைகள், எரிபொருள் மற்றும் பிற முக்கிய ராணுவ உபகரணங்களை சேமிக்கும் இடமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுபோல எல்லைப் பகுதியில் இன்னும் பல சுரங்கப்பாதைகள் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷின்குன் லா பாதையை பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு 500 மீட்டருக்கும் குறுக்கு வழி தடங்களை கொண்ட வகையில் இது கட்டப்படுகிறது. இந்த கட்டுமான பணிகள் முடிவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என சொல்லப்படுகிறது. தற்போது சீனாவின் உள்ள மி லா சுரங்க பாதை உலகிலேயே உயரமான இடத்தில் கட்டப்பட்டதாக இருந்தது. தற்போது ஷின்குன் லாவுக்கு அந்த பெருமை கிடைத்துள்ளது.
ஷின்குன் லா பகுதியை பொறுத்தவரை இங்கே ஒவ்வொரு ஆண்டிலும் சுமார் ஐந்து மாதங்களுக்கு பனியால் மூடப்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படுகிறது. தற்போது இங்கே சுரங்கப்பாதை அமைப்பதன் மூலம் அனைத்து சூழல்களிலும் இந்த பகுதியிலும் இணைப்பு என்பது உறுதி செய்யப்படுகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சீனாவுக்கு அருகே இருக்கக்கூடிய கிழக்கு லடாக்கில் இருந்து அருணாச்சலப் பிரதேசம் வரையிலான பகுதியில் மத்திய அரசு பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி உள்ளது, சாலைகள் அமைப்பது, சுரங்கப்பாதைகள் அமைப்பது, பாலங்கள் கட்டுவது என்பன உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் இந்த பகுதியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications