இந்தியாவின் சிலிக்கான் வேலி என அறியப்படும் பெங்களூருவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வேலைக்காகவும் படிப்புக்காகவும் படை எடுக்கின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரமாக பெங்களூரு இருக்கிறது.
பெங்களூரை பொருத்தவரை தற்போது தெற்கு பெங்களூரு பகுதிகள் நல்ல வளர்ச்சி அடைந்து வருவது தெரிய வருகிறது. தெற்கு பெங்களூரில் இருக்கும் சந்தப்புரா பகுதி ஓசூருக்கு அருகிலேயே அமைந்திருப்பது மட்டுமில்லாமல் பெங்களூருவின் முக்கியமான பகுதிகளுக்கு எல்லாம் எளிதான போக்குவரத்து வசதியை கொண்டு இருக்கிறது. சந்தப்புரா பகுதியில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி பகுதிக்கு பத்து நிமிடங்களில் சென்று விடலாம், எலக்ட்ரானிக் சிட்டி என்பது பெங்களூருவில் ஐடி நிறுவனங்கள் செயல்படக்கூடிய முக்கியமான பகுதி.

எலக்ட்ரானிக் சிட்டியில் தான் இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் , பயோகான் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அடுத்ததாக சந்தப்புரா பகுதியிலிருந்து ஓசூருக்கு செல்வதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே தேவை. ஓசூரில் தற்போது பல்வேறு ஆட்டோமொபைல் மற்றும் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன . டிவிஎஸ் மோட்டார்ஸ், அசோக் லேலாண்ட் ,டாடா , ஓலா உள்ள பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன.
தெற்கு பெங்களூரு பகுதியில் இருந்து ஓசூருக்கு சென்று பணியாற்றி விட்டு வருவது மிக எளிதாக இருக்கிறது. இது தவிர கர்நாடக மாநில அரசு பெங்களூருவில் பொம்மசந்திரா வரை மெட்ரோ சேவையை விரிவாக்கம் செய்ய இருக்கிறது .கூடிய விரைவில் இதனை ஓசூர் வரை நீட்டிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது என்பதால் தெற்கு பெங்களூருவுக்கு டபுள் ஜாக்பாட் தான்.
சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு மற்றும் பெரிபெலர் ரிங் ரோடு ஆகிய இரண்டு சாலை பணிகளும் முடிவடைந்து விட்டால் தெற்கு பெங்களூருவில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குமான சாலை போக்குவரத்து இணைப்பு எளிமையானதாக மாறிவிடும்.
இது தவிர ஓசூர் பகுதியில் தமிழ்நாடு அரசு விமான நிலையம் அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அவ்வாறு விமான நிலையம் அமைந்துவிட்டால் பெங்களூருவின் ஹாட் ஸ்பாட்டாக தெற்கு பெங்களூரு மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் தெற்கு பெங்களூருவில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கவனம் திரும்பியுள்ளது. பல நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் திட்டங்களை அறிவித்துள்ளன.
பள்ளிகள் மற்றும் மருத்துவமனை வசதிகளும் இங்கே அதிகரித்துள்ளதால் ரியல் எஸ்டேட் முதலீட்டுக்கு ஏற்ற இடமாக பெங்களூரு மாறி இருக்கிறது. எனவே முதலீடு நோக்கில் குடியிருப்புகளை வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் தெற்கு பெங்களூருவில் வாங்கினால் குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சியை காண முடியும் என்கின்றனர் ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள்.
ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால் அதற்கேற்ப மால்கள் கட்டமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. எனவே இந்த பகுதியில் ரியல் எஸ்டேட் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல வாடகை வருமானம் கிடைக்கும் என இந்த துறை சார்ந்தவர் தெரிவிக்கின்றனர்.
Story Written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications