சென்னை: தைவான் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதில் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக மின்னணு சாதன மற்றும் காலணி உற்பத்திகளில் ஈடுபடக்கூடிய தைவான் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் தங்களின் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டையே விரும்புகின்றன.
தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்களுடைய உற்பத்தி ஆலையை நிறுவி செயல்படுத்தி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை தயாரித்து வழங்குகிறது.

சென்னையில் இருக்கும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் மொத்தம் 270 தைவான் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் தான் இயங்குகின்றன என தெரிவிக்கிறது.
காலணி உற்பத்தி நிறுவனமான Feng Tayஇன் துணை நிறுவனமான லோட்டஸ் தமிழ்நாட்டில் தங்களுடைய உற்பத்தி ஆலையை நிறுவி 40,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது.
அதேபோல தைவானை தலைமையிடமாக கொண்டு செயல்படக்கூடிய மின்னணு சாதன உற்பத்தி நிறுவனமான பெட்ரான் மற்றும் டெல்டா ஆகியவை தமிழ்நாட்டில் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை நிறுவி சுமார் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு தந்துள்ளது.
தைவானை சேர்ந்த ஷூ தயாரிப்பு நிறுவனங்களான ஷு டவுன் உள்ளிட்டவை தமிழ்நாட்டில் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை நிறுவ இருக்கின்றன. உலகிலேயே தடகள வீரர்களுக்கான பிராண்டட் ஷூக்களை தயாரித்து வழங்கும் முன்னணி நிறுவனமான பவுச்சின் தமிழ்நாட்டில் 2302 கோடி முதலீடு செய்து உற்பத்தி ஆலையை நிறுவ இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மொத்தம் 40 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இயங்குகின்றன. இங்கே சுமார் 20 தைவான் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக 2022 ஆம் ஆண்டு வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.
தைவான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மின்னணு சாதனங்கள் மற்றும் காலணி உற்பத்திகளில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றன என வழிகாட்டி தமிழ்நாடு அமைப்பின் தலைவர் விஷ்ணு ஐஏஎஸ் தெரிவிக்கிறார்.
தைவானை சேர்ந்த நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக எந்த ஒரு சிறப்பு சலுகையோ நிதி உதவியோ வழங்கவில்லை ஆனால் தொழில் தொடங்குவதற்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்கி தந்திருப்பதால் தைவானை சேர்ந்த நிறுவனங்களின் பிடித்தமான முதலீட்டு பகுதியாக தமிழ்நாடு மாறி இருக்கிறது என கூறுகிறார்.
மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு தான் இந்திய ஜிடிபி-யில் அதிக பங்களிப்பு தரும் மாநிலமாக இருக்கிறது . இங்கே 39 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்குகின்றன. மேலும் இந்தியாவிலேயே அதிக அளவிலான பெண் பணியாளர்களை கொண்டு தொழிற்சாலைகளை இயக்கி வரும் ஒரு மாநிலம் என்ற பெருமை தமிழ்நாட்டிற்கு உண்டு. தமிழ்நாட்டினை பொறுத்தவரை ஆறு விமான நிலையங்களும், நான்கு பிரதான துறைமுகங்கள் மற்றும் 19 சிறிய ரக துறைமுகங்களும் இயங்குகின்றன.
இந்தியாவின் மொத்த மின்னணு சாதன உற்பத்தியில் 20% தமிழ்நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களில் 33 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படக்கூடிய காலணிகளில் 39 சதவீதம் தமிழ்நாட்டில் தான் தயாரிக்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications