அமெரிக்கா: இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர்ச்சூழல் உண்டாகியுள்ளது.
இதில் ஈரானின் ராணுவ நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, ஈரானின் செயல்பாடுகளை முடக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக் கூடாது மீறினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா தொடர்ந்து ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.

ஆனால் ஈரான் அமெரிக்காவின் பேச்சுக்கு செவி மடுக்காமல் தாக்குதலை தொடர்கிறது. எனவே ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக ஈரான் ராணுவத்திற்கு உதவி செய்யும் பல நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
ஈரான் ராணுவத்திற்கு ஆயுதங்களையும் உபகரணங்களையும் வழங்கும் நிறுவனங்களில் ஈரானில் உற்பத்தியாகும் ஆயுதங்களை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல உதவி செய்யும் நிறுவனங்களை குறி வைத்து அமெரிக்க அரசு பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. இதில் ஈரானுடன் வர்த்தகம் செய்ததாக கூறி மூன்று இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக கூறி பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த மூன்று நிறுவனங்களும் அடங்கும். ஈரானுடன் வர்த்தகம் செய்ததாக கூறி அமெரிக்க கருவூலத்துறை இந்த பொருளாதார தடை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ஈரானிடம் இருந்து ஆளில்லா விமானங்களை ரகசியமாக ரஷ்யாவுக்கு விற்பனை செய்வதற்கும், நிதி உதவி செய்வதற்கும் இந்த நிறுவனங்கள் முக்கிய பங்கு வகுத்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. சஹாரா தண்டர் நிறுவனம் ஆளில்லா விமானங்களை ஈரான் ராணுவத்திடம் இருந்து பெற்று மற்ற நாடுகளிடம் சேர்த்து சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுகிறது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
சஹாரா தண்டர் நிறுவனத்திற்கு உதவி செய்ததாக கூறி ஜென் ஷிப்பிங், போர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் சீ ஆர்ட்ஷிப் மேனேஜ்மெண்ட் ஆகிய3 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பது, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவது, ஆபத்தான ராணுவ உபகரணங்களை முறைகேடாக விற்பனை செய்வது என ஈரானின் செயல்பாடுகள் அனைத்துமே உலக அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
ஈரான் தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்தி கொள்ளவில்லை எனில் அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியை தடுக்கும் வகையில் பொருளாதார தடைகளை விதிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்டில் சிக்காம இருக்கனுமா? உங்க வீட்டு கேஸ் அடுப்ப இப்படி யூஸ் பண்ணுங்க!!

எல்பிஜி தட்டுப்பாடு: ரயில் பயணிகளுக்கு உணவு விநியோகத்தில் சிக்கலா? IRCTC வெளியிட்ட புது அறிவிப்பு

சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னை, பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடல்!! அப்போ வீட்டு உபயோக சிலிண்டர் நிலைமை?

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!

ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும்? – அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த முக்கிய அப்டேட்..!!

அடிமடியிலேயே கை வைத்த அமெரிக்கா..! கொந்தளிக்கும் ஈரான்..! 2ஆவது வாரத்தில் ஈரான் போர்..!

டிரம்ப் எடுத்த ஒற்றை முடிவு.. இந்தியா-வுக்கு பெரும் இழப்பு..!!

அமெரிக்காவின் அடிமடியில் கை வைக்கும் IRAN..!! கூகுள், மைக்ரோசாப்ட், IBM-ஐ கட்டம் கட்டி அடிக்க முடிவு..!

தமிழ்நாட்டில் எத்தனை நாட்களுக்கு பெட்ரோல் இருப்பு உள்ளது? – பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் தகவல்

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications