இந்தியாவை சேர்ந்த உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் பலரும் இந்தியாவை விட்டு வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருவதாக கோடக் பிரைவேட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. சிறந்த வாழ்க்கை தரம் ,தொழில் செய்வதற்கு சாதகமான சூழல் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவை சேர்ந்த உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களில் 22 சதவீதம் பேர் வேறு நாடுகளுக்கு இடம்பெயர விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார்கள்.
கோடக் பிரைவேட் நிறுவனம் ஒரு தனியார் ஆய்வு நிறுவனத்தோடு சேர்ந்து 150 உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களிடம் ஆய்வு நடத்தியது. இந்தியாவில் 25 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களை உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் என அழைக்கிறோம். அப்படி இந்தியாவில் 2.83 லட்சம் பேர் 25 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பை கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

2028ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 4.3 லட்சம் ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பல்வேறு நபர்களும் இந்தியாவை விட்டு வேறு நாடுகளுக்கு குடியேறுவதில் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் 7500 உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறினார். 2023 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5,00 ஆகவும் 2024ஆம் ஆண்டில் 4300 ஆகவும் இருக்கிறது.
பாரம்பரியமாக குறைந்த வரி விதிப்பு, நல்ல தொழில் வாய்ப்புகள் மற்றும் அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மை உள்ளிட்டவை தான் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் இந்தியாவிலிருந்து வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
தற்போது இந்த காரணங்கள் மாறி இருக்கின்றன என ஆய்வறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. அதாவது இந்தியாவில் இருந்து வெளியேறும் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் வாழ்க்கை தரம், தங்களுடைய குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகள் மற்றும் பருவநிலை மாற்ற பாதிப்பு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தான் இந்தியாவிலிருந்து வெளியேறுகின்றனர் என கூறுகிறது.
தங்கள் குழந்தைகளின் எதிர்கால உயர்கல்வியை கருத்தில் கொண்டு பலரும் வெளிநாடுகளில் செட்டிலாக விரும்புகிறார்களாம். இவ்வாறு இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என எண்ணூம் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் வயது பெரும்பாலும் 36லிருந்து 40க்குள் இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்ல விரும்புகிறார்களாம்.
குறைந்த வரி, நல்ல கல்வி முறை, சிறந்த வாழ்க்கை தரம் உள்ளிட்டவையே இந்த நாடுகளுக்கு இவர்கள் செல்வதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. சர்வதேச அளவில் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறுவதில் பிரிட்டன் முதலிடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் இந்தியா மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானவர்களின் விருப்பமான இடமாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications