சீனாவின் வளர்ச்சி இந்தியாவுக்கு பாதிப்பா.. இந்திய அரசு என்ன செய்ய போகிறது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில காலாண்டுகளாக சீனாவில் மந்தமான நிலையே இருந்து வருகின்றது. தொடர்ந்து கொரோனாவின் பிடியில் சிக்கி சீரழிந்து வந்த சீனாவில், பரவிய கொரோனா பெருந்தொற்றினை குறைக்க அரசு ஜீரோ கோவிட் பாலிசியினை அமல்படுத்தியிருந்தது. இதன் காரணமாக சீனாவின் பொருளாதாரம் என்பது மிக மோசமான நிலையை எட்டியது.

தொழில்துறை வளர்ச்சியானது மோசமான சரிவினைக் கண்டுள்ளது. இதனால் சீனாவில் அன்னிய முதலீடுகள் என்பது வெகுவாக குறைந்துள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் பெரியளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளன.

சீனா நிறுவனத்தின் திடீர் முடிவு.. இந்தியாவில் மிகப்பெரிய ஆலை.. எங்கு தெரியுமா? சீனா நிறுவனத்தின் திடீர் முடிவு.. இந்தியாவில் மிகப்பெரிய ஆலை.. எங்கு தெரியுமா?

இந்தியாவில் அன்னிய முதலீடு

இந்தியாவில் அன்னிய முதலீடு


இந்த முதலீட்டில் கணிசமாக இந்தியாவின் பக்கம் திரும்பியது எனலாம். ஏனெனில் சர்வதேச நாடுகள் பலவும் மோசமான சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்தியா மட்டும் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது. இது அன்னிய முதலீட்டாளர்களை இந்தியர்களின் பக்கம் திருப்பியது எனலாம்.

மீண்டும் முதலீடுகள் அதிகரிப்பு

மீண்டும் முதலீடுகள் அதிகரிப்பு

ஆனால் சீன அரசு தங்களது கட்டுப்பாடுகளில் பெரும் தளர்வினை அறிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது சீனாவின் துவண்டு போன தொழில் துறையானது மீளத் தொடங்கியுள்ளது. பொருளாதார வளர்ச்சி குறித்தான காரணிகள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளன. இதன் காரணமாக சீனாவில் மீண்டும் முதலீடுகள் அதிகரிக்கலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.

முதலீடுகள் வெளியேறுமா?

முதலீடுகள் வெளியேறுமா?

இதன் காரணமாக இந்தியாவில் இருக்கும் முதலீடுகள் வெளியேறலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இம்மாதத்தில் இந்தியாவில் இருந்து அன்னிய முதலீடுகள் பெரியளவில் வெளியேறியுள்ளது. இதன் காரணமாகத் தான் இந்திய சந்தை மற்றும் பங்கு சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறத் தொடங்கியுள்ளது.

சீனா இந்தியா என இருபெரும் பொருளாதார நாடுகளும் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்ப தொடங்கியுள்ளன. .

ஜனவரியில் FPI வெளியேற்றம்

ஜனவரியில் FPI வெளியேற்றம்


ஏற்கனவே ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய சந்தையில் 18,800 கோடி ரூபாயாக வெளியேறியுள்ளது. இது மாத அடிப்படையில் பார்க்கும்போது ஜூன் 2022ல் 50,203 கோடி ரூபாய் மிக மோசமாக வெளியேறியது. எனினும் அதன் பிறகு அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து அன்னிய முதலீட்டாளர்கள் நிகர வாங்குபவர்களாக இருந்தனர். அதன் பிறகு டிசம்பர் மாதத்தில் 11,119 கோடி ரூபாயாகவும், நவம்பர் மாதத்தில் 36,239 கோடி ரூபாயாக முதலீடுகள் செய்யப்பட்டது.

முதலீடுகள் வெளியேறலாம்

முதலீடுகள் வெளியேறலாம்

இந்தியாவில் தொடர்ந்து அன்னிய முதலீடுகள் மீடியம் டெர்மில் அழுத்தம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நீண்டகால நோக்கில் மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்துள்ள நிலையில், ரெசசன் வரலாமோ என்ற அச்சம் உள்ளது. இது தொடர்ந்து பணவீக்கம் குறையும் வரையில் இனியும் அதிகரிக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. தொடர்ந்து பொருளாதாரத்தில் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Will China's economic growth affect India?

Will China's economic growth affect India?
Story first published: Tuesday, January 17, 2023, 17:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X