இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு என மத்திய அரசு சார்பாக பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட ஒரு முதலீட்டு திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா. இதனை செல்வமகள் சேமிப்பு திட்டம் என அழைக்கிறோம். செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் பெயரில் நாம் செய்யக்கூடிய முதலீடுகளுக்கு அரசு தற்போது ஆண்டுதோறும் 8.2 % வட்டியை வழங்குகிறது.
நம் நாட்டில் அதிக அளவு வட்டி வருமானம் தரக்கூடிய ஒரு பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தி திட்டத்தின் கீழ் பெற்றோர் முதலீடு செய்ய முடியும். 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 11 வது ஆண்டாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்கள் , நகரங்கள் என ஏராளமான பகுதிகளில் பெற்றோர் தங்களுடைய பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பணத்தை முதலீடு செய்வதை காண முடிகிறது.

10 வயது உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தங்களுடைய மகள்களின் பெயரில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாதித் தொகையை திரும்ப பெறலாம், அந்த குழந்தைக்கு 21 ஆண்டுகள் நிறைவடைந்த உடன் முழு தொகையும் திரும்பப் பெறலாம். படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும் விதமாக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
குறைந்தபட்சம் 250 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை ஓர் நிதியாண்டில் நாம் முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடுகளை குறிப்பிட்டு பெற்றோர் வருமான வரி விலக்கும் பெற முடியும். ஒரு குழந்தை பிறந்த உடனேயே மாதந்தோறும் செய்யத் தொடங்கலாம். நாம் செய்யக்கூடிய முதலீட்டை பொறுத்து திட்டம் முதிர்வடையும் போது கிடைக்கும் பணம் அமையும்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வட்டியை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. முதன்முதலில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது 2015ஆம் ஆண்டில் 9.1 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. அதுவே பின்னர் 9.2 சதவீதம் என உயர்த்தப்பட்டது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அது குறைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்தில் 8.2 % வட்டி வழங்கப்படுகிறது.
இந்த சூழலில் திமுக எம்பி டி.ஆர்.பாலு மக்களவையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி குறைந்ததால் , இதில் இணையும் பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா, மத்திய அரசிடம் இந்த திட்டத்தின் வட்டியை அதிகரிக்கும் முடிவு இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கர் சவுத்ரி அளித்துள்ள பதிலில் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆண்டுதோறும் புதுப்புது இந்தியாவிலேயே அதிக அளவு வட்டி வருமானம் தரக்கூடிய ஒரு முதலீடு திட்டம் இது என கூறினார். இந்த திட்டத்தில் தற்போது 424.57 லட்சம் கணக்குகளும், 2.99 லட்சம் கோடி ரூபாய் முதலீடும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வட்டி குறைந்ததால் பயனாளிகள் குறையவில்லை மாறாக ஒவ்வொரு ஆண்டும் பயனாளிகள் அதிகரித்து வருகிறார்கள் முதலீடும் அதிகரித்து தான் வருகிறது. எனவே தற்போதைக்கு வட்டியை உயர்த்தும் முடிவு எதையும் அரசு எடுக்கவில்லை 8.2% வட்டி தொடர்ந்து வழங்கப்படும் இந்தியாவிலேயே இது அதிகபட்ச வட்டி தரும் ஒரு திட்டம் என பதில் அளித்துள்ளார்.எனவே தற்போதைக்கு அரசு செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டியை உயர்த்தப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. அதே வேளையில் மக்கள் தொடர்ந்து இதில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் வட்டியை மேற்கொண்டு அரசு குறைக்காது என்றே சொல்லப்படுகிறது.
More From GoodReturns

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!



Click it and Unblock the Notifications

