அலாஸ்கா: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா உடனான அனைத்து வணிக தொடர்புகளையும் நிறுத்தி வைத்துவிட்டன.
இந்த சூழலில் தான் ரஷ்யா இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய நிறுவனங்கள் ரஷ்ய நிறுவனங்களிடம் இருந்துதான் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குகின்றன. ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சீனாவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவின் இருக்கின்றன.

இந்தியா, சீனா ஆகிய நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதால் தான் ரஷ்யாவின் பொருளாதார நிலைத்து நிற்கிறது இதுதான் அந்த நாடு தொடர்ந்து உக்ரைன் போரில் தீவிரமாக இயங்குவதற்கு உதவுகிறது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. இந்த சூழலில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முதல் கட்டமாக 25% வரியை விதித்த டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி மேலும் 25 சதவீத வரியை விதித்தார்.
வரும் 27ஆம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி என்பது அமலுக்கு வருகிறது. டிரம்பின் இந்த அறிவிப்பு மத்திய அரசையும் இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி துறை சார்ந்த தொழில்களையும் பெருமளவில் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது . இந்த சூழலில் உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
புதின் உடனான சந்திப்பை அடுத்து ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள டிரம்ப்பிடம் உக்ரைன் போர் முடிவுக்கு வரவில்லை என்றால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தீர்களே அந்த நிலைப்பாடு மாறி இருக்கிறதா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்துள்ள டிரம்ப் இந்த விவகாரத்தில் தற்போதைக்கு எந்த முடிவையும் நான் எடுக்கவில்லை ஆனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவு எடுப்பேன் என தெரிவித்திருக்கிறார். இப்போதைக்கு இந்த விஷயத்தை பற்றி நான் எதுவும் சிந்திக்கவில்லை இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இதைப் பற்றி நான் யோசிக்கிறேன் இன்றைய ஆலோசனைக் கூட்டம் நன்றாக சென்றது என தெரிவித்திருக்கிறார் .
எனவே தற்போதைக்கு சீனாவுக்கு எந்த கூடுதல் வரியும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது, ஆனால் இந்தியா மீது என்ன முடிவெடுப்பார் என்பது பேச்சுவார்த்தையின் போக்கை பொறுத்து மாறும் என சொல்லலாம். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடிய நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியா மீது நாங்கள் வரி விதித்ததால் ரஷ்யா தன்னுடைய பெரிய வாடிக்கையாளரை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தினால் தான் இந்த பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைத்தது என டிரம்ப் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
முதலில் இந்தியாவை இழந்து விடுவோம் அதை தொடர்ந்து சீனாவையும் இழந்து விடுவோம் என்ற அச்சம் ரஷ்யாவிடம் ஏற்பட்டிருக்கிறது என குறிப்பிட்டு இருந்தார். இதற்கிடையே டிரம்பின் மிரட்டல் ஒரு புறம் இருந்தாலும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இதுவரை குறைக்கவில்லை. ஆகஸ்ட் மாத நிலவரப்படி ஒரு நாளைக்கு 2 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது .
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications