சர்வதேச அளவில் பணவீக்கம் என்பது பல நாடுகளின் பொருளாதாரத்திலும் பெரும் தலைவலியாக இருந்து வருகின்றது. பணவீக்கத்தினை கட்டுப்படுத்த பல்வேறு நாட்டு மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன.
தற்போது அதன் பலனாக பணவீக்கம் என்பது சரிய தொடங்கியுள்ள நிலையில், வட்டி அதிகரிப்பினால் பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதன் காரணமாக பல்வேறு சர்வதேச நாடுகளிலும் ரெசசன் அச்சம் எழுந்துள்ளது.
இந்தியாவில் தாக்கம்
எனினும் இந்தியாவில் பெரியளவில் தாக்கம் இல்லை என்றாலும், இந்தியாவின் வளர்ச்சி விகிதத்திலும் தாக்கம் இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனினும் தற்போது வரையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது, உலக நாடுகளில் பாதிக்கப்பட்டளவுக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஏற்றுமதி விகிதமானது கொரோனாவின் வருகைக்கு பிறகு இந்தியாவில் அதிகரித்துள்ளது.
தேவை அதிகரிக்கலாம்
ஜூலையில் ஏற்றுமதி 2021 பிப்ரவரி 2021க்கு பிறகு மெதுவான வளர்ச்சியினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இடையில் 47% வளர்ந்துள்ளதாக கடந்த வாரம் வெளியிடப்பட்ட வர்த்தக தரவுகளைக் காட்டுகிறது. உலகளாவிய தேவை மற்றும் அதிகரித்து வரும் வளர்ச்சி என பலவும் சந்தையில் தேவையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தான் மைல்கல்லா?
எனினும் இந்தியாவினை விட பல நாடுகள் இன்னும் வேகமான வளர்ச்சியினை கண்டு வருகின்றன. 2021ல் 400 பில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்கு ஏற்றுமதியினை இந்தியா ஒரு மைல்கல்லாக கூறியது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை போதுமானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
என்ன செய்யணும்?
2030-க்குள் ஏற்றுமதி இலக்கு 1 டிரில்லியன் டாலர் ஆக உள்ளது. அதற்குள் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக வளர்ந்திருக்கும் என்று வைத்துக் கொள்வோம். உலகளாவிய மந்த நிலைக்கு மத்தியில் இந்தியா பின்னடைவை கண்டு வரும் நிலையில், ஏற்றுமதியினை அதிகரிக்க திட்டமிட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய நிலை
இந்தியா அதன் ஏற்றுமதியில் பொறியியல் பொருட்கள் 25%மும், பெட்ரோலிய பொருட்கள் 16%மும், , தோல், ஜவுளி மற்றும் ரத்தினங்கள், நகைகள் 32% ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
More From GoodReturns

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications