இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரூபாய் வாயிலாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் செய்யப் புதிய கட்டமைப்பை உருவாக்கி ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் உடனான வர்த்தகத்தை மேம்படுத்த வழிவகைச் செய்தது.
இத்திட்டம் மூலம் இந்திய ரூபாய் மதிப்பின் சரிவைக் காப்பது மட்டும் அல்லாமல் நாட்டின் அன்னிய செலாவணி வெளியேற்றத்தைப் பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியும். ஆனால் இதற்குப் பின்னால் மற்றொரு காரணமும் உண்டு என்பது தான் தற்போது வெளியாகியுள்ள தகவல்.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வரும் நிலையில், தன்நாட்டுப் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல முக்கியமான நடவடிக்கையை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஆர்பிஐ
மத்திய அரசின் ஒப்புதலின் கீழ் ஆர்பிஐ உருவாக்கியுள்ள ரூபாய் மதிப்பிலான பேமெண்ட் முறை ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் மட்டும் அல்லாமல் இலங்கைக்கும் பெரிய அளவில் பயன்பெறும். இலங்கையின் பொருளாதாரம் மோசமான நிலையை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் இந்திய ரூபாய்க்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 0.22 ரூபாயாகக் குறைந்துள்ளது.
இந்திய ரூபாய்
இந்த நிலையில் இலங்கை தனது பொருளாதாரத்தை மேம்படுத்த முக்கியமான பல பிரிவுகளிலும், துறைகளிலும் இலங்கை ரூபாய்க்குப் பதிலாக இந்திய ரூபாயைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை பொருளாதாரம்
இலங்கை பொருளாதாரம் கொரோனா பாதிப்பின் போது அதாவது 2020 காலகட்டத்தில் -3.5 சதவீதம் வரையில் சரிந்தது. இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் தலைவரான நந்தலால் வீரசிங்க இந்த ஆண்டு இலங்கை பொருளாதாரம் -6 சதவீதத்திற்கு மேல் சரியும் என அறிவித்துள்ளார்.
இலங்கை முடிவு
இலங்கையின் நாணய மாற்றம் (Currency Swap) முடிவின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய முதலீடுகளை ஈர்ப்பது மட்டும் அல்லாமல் பேமெண்ட் அனைத்தையும் இந்திய ரூபாய் வாயிலாகச் செய்யும் போது அன்னிய செலாவணி கையிருப்பு பெரிய அளவில் காப்பாற்ற முடியும்.
ரொஷான் பெரேரா
இதேவேளையில் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பணிப்பாளரும், அட்வகேட்டா நிறுவனத்தின் மூத்த அதிகாரியுமான ரொஷான் பெரேரா, இலங்கை நாட்டின் இலங்கை ரூபாய்க்கு இணையாக இந்திய ரூபாயைப் பயன்படுத்துவது சரியாக இருக்காது எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாணயங்கள்
ஆனால் ஜிம்பாப்வே, எல் சால்வடோர் போன்ற பல நாடுகளில் 2 நாணயங்களைப் பயன்படுத்தி வருகிறது. எனவே இதை எப்படி இலங்கையில் அமைய இருக்கும் புதிய அரசு கையாளுகிறது என்பது தான் தற்போதைய முக்கியமான பிரச்சனை.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications