2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 23ஆம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு வசதி துறைக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் என்ன அறிவிப்பை வெளியிடுவார் என்பது குறித்தும் பலரும் பல எதிர்பார்ப்புகள் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் EY இந்தியா நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவு தலைவரான கௌரவ் கார்னிக் ரியல் எஸ்டேட் துறை நமது பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருக்கிறது, பொருளாதார முன்னேற்றத்தை முன்னேற்றத்தை கருத்தில் கொள்ளும்போது ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியையும் கவனத்தில் கொள்வது அவசியமாகும் என கூறியுள்ளார். ரியல் எஸ்டேட் துறை சார்ந்த சாதகமான அறிவிப்புகள் வரும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குடியிருப்பு பிரிவுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என்பதே ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார். மலிவு விலை வீடுகளுக்கான தகுதி என்பது அதன் மதிப்பை விட பிளாட்டின் அளவை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற மாற்றத்தோடு மலிவு விலை வீட்டு வசதிகளுக்கான வரி விடுமுறை அதாவது தற்காலிகமாக வரியை ரத்து செய்யக்கூடிய முறையை மீண்டும் அறிமுகப்படுத்தலாம் என அவர் ஆலோசனை தெரிவிக்கிறார்.
மேலும் 2022 ஆம் ஆண்டுடன் காலாவதியான கடன் இணைக்கப்பட்ட மானியம் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது மேலும் வீட்டுக் கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி தொகையை சுட்டிக்காட்டி வருமான வரி விலக்கை பெற முடிகிறது. ஆனால் ஓர் நிதியாண்டில் 2 லட்சம் ரூபாய் வரை மட்டுமே கணக்கு காட்ட முடியும், இதனை குறைந்தது 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
வாடகை வீட்டு வசதிக்கான குறைந்தபட்ச வரி ஊக்கத்தொகையை அரசு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அரசு அனைவருக்கும் வீட்டு வசதி என்ற இலக்கை நிறைவேற்ற குறிப்பிட்ட இந்த மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
REIT சந்தையில், REIT யூனிட்களுக்கான நீண்டகால மூலதன ஆதாய வரி முறையை பட்டியலிடப்பட்ட ஈக்விட்டி பங்குகளுக்கு இணையாக கொண்டு வர வேண்டியது அவசியம் என அவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதலாக மூன்று கோடி வீடுகளை கட்டுவதற்கு ஒப்புதலை அளித்துள்ளது. 2015 -16ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா தகுதியான கிராம புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களை குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை கட்டுவதற்கு உதவி செய்து வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications