கொரோனாவின் வருகைக்கு பிறகு பல நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வேறு வழியின்றி வீட்டில் இருந்து பணியாற்ற கூறின. ஆனால் தற்போது இரண்டாம் கட்ட கொரோனாவின் தாக்கம் குறைந்து, ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் திரும்ப தொடங்கியுள்ளனர்.
ஆனால் இந்த நிலையிலும் கூட வீட்டில் இருந்து பணிபுரிவது தொடரலாம் என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர், ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.
மேலும் ஹைப்ரிட் கலாச்சாரம் என்பது தொடரும் என கூறியுள்ளார்.
டெக் மகேந்திராவின் கையகப்படுத்தல்
சமீபத்தில் மஹிந்திரா குழுமத்தின் துணை நிறுவனமான டெக் மஹிந்திரா, ஆக்டிவஸ் கனெக்ட் (Activus Connect) என்ற நிறுவனத்தை 62 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. இந்த கையகப்படுத்தல் மூலம் நிறுவனம் மேற்கொண்டு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் திறனை மேம்படுத்தும். இது வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்தும்.
திறனை மேம்படுத்தும்
சந்தையில் தற்போது டிஜிட்டல் தேவையானது அதிகரித்துள்ள நிலையில், அதிவேக தேவை உள்ளது என, டெக் மகேந்திராவின் BFSI மற்றும் HLS கார்ப்பரேட் மேம்பாட்டு தலைவர் விவேக் அகர்வால் கூறியுள்ளார். மேலும் ஆக்டிவஸ்-ன் கையகப்படுத்தலானது தனித்துவமான டெலிவரி மாடல் மற்றும் அதன் தளத்தில் உள்ள இடைவெளியை போக்கும். இது டெக் மஹிந்திராவின் சேவைக்கு மேலும் உதவிகரமாக இருக்கும் என கூறியுள்ளார்.
பிளெக்ஸி பணி கலாச்சாரம்
இது குறித்து ட்விட்டரில் ஆனந்த் மஹிந்திரா, கொரோனாவுக்கு பிறகு வீட்டிலிருந்து வேலை செய்யப்போவது தொடரலாம். சில வகையான கலப்பின வேலை கலாச்சாரம் சந்தையில் நிலைத்திருக்கும். இது வீட்டில் இருந்து பணிபுரியும் கலாச்சாரத்தினை மேம்படுத்தும். இதற்கிடையில் ஆக்டிவஸின் கையகப்படுத்தல் இன்னும் WFH கலாச்சாரத்தினை மேம்படுத்த உதவும் என கூறியுள்ளார்.
பிளெக்ஸி பணி கலாச்சாரம்
மஹிந்திரா நிறுவனம் வீட்டிலிருந்து வேலை மற்றும் அலுவலகம் சென்று பணிபுரியும், ஒரு பிளெக்ஸி பணி கலாச்சாரத்தினை ஊக்குவிக்கும் வகையில் ஆதரவு கொடுத்து வருகின்றது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ட்வீட்டில் ஆனந்த் மஹிந்திரா, கொரோனாவிற்கு பின்பும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவது அதிகமாக இருக்கலாம் என நம்புவதாக கூறியிருந்தார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications