இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களின் ஒன்றான விப்ரோ அதன் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு வேரியபிள் பே நிறுத்த முடிவு செய்துள்ளது.
பேரியபிள் பே என்பது ஒரு ஊழியரின் சம்பளத்தில் கணிசமான பகுதியை அந்த ஊழியரின் செயல் திறன் அடிப்படையில் அளிக்கப்படும் தொகை.
வேரியபிள் பே
இது மொத்த சம்பளத்தில் ஒரு பகுதி என்பதால் வேரியபிள் பே குறையும் போது ஊழியர்களுக்குக் கையில் கிடைக்கும் சம்பளம் குறையும். மேலும் வேரியபிள் பே பெரும்பாலும் காலாண்டு அடிப்படையில் நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கும். ஆனால் சில நிறுவனங்களில் மாத அடிப்படையிலும் அளிக்கப்படுகிறது.
விப்ரோ
விப்ரோ நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு வேரியபிள் பே நிறுத்த முடிவு செய்த நிலையில் புதிய மற்றும் இளநிலை ஊழியர்களுக்கு 30 சதவீத பிடிக்கப்பட்ட பின்பு வேரியபிள் பே தொகையை அளிக்க உள்ளதாக முடிவு செய்துள்ளது.
மின்னஞ்சல்
இதுகுறித்து விப்போ தனது விளக்க அனுப்பிய மின்னஞ்சலில் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் அழுத்தம் காரணமாக வேரியபிள் பே குறைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
விளக்கம்
விப்ரோ தனது சி பேண்ட் மற்றும் மூத்த ஊழியர்களுக்கு வேரியபிள் பே பெறமாட்டார்கள் என்று மின்னஞ்சல் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஏ மற்றும் பி பேண்டுகளில் உள்ள பணியாளர்கள் வேரியபிள் பே இலக்குத் தொகையில் 70 சதவீதத்தைப் பெறுவார்கள் என்று விப்ரோ நிறுவனத்தின் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் மாத சம்பளம்
மேலும் இந்த வேரியபிள் பே குறைப்பை விப்ரோ ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத இறுதியில் கிடைக்கும் மாதாந்திர ஊதியம் குறைக்கப்படும் என்று விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் டெக் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் இந்தியாவில் முதலாவதாக விப்ரோ தனது ஊழியர்களின் வேரியபிள் பே-வை கட் செய்துள்ளது.
இலக்கை அடையத் தவறியது
விப்ரோ நிறுவனத்தில் டீம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலக்கை அடையத் தவறியதை அடுத்து, வேரியபிள் பே ஊதியத்தை நிறுத்தி வைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனம் கூறியது.
காலாண்டு மார்ஜின்
talent supply chain-ல் திறமையின்மை, ப்ராஜெக்ட் மார்ஜின்ஸ் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தீர்வுகளில் முதலீடுகள் ஆகியவற்றில் முதல் காலாண்டில் மார்ஜின் 15 சதவீதமாகக் குறைந்து இருப்பதால் இந்தச் சம்பள குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 1 குட் நியூஸ்
இதே இமெயிலில் செப்டம்பர் 1ஆம் தேதி அளிக்கப்படும் சம்பள உயர்வில் எவ்விதமான மாற்றமும் பாதிப்பும் இருக்காது எனவும் விப்ரோ தெரிவித்துள்ளது விப்ரோ ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கையை அளித்துள்ளது.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications