இந்திய ஐடி சேவை துறையில் மந்தநிலை உருவாக உள்ளதாக பல கணிப்புகள் வந்திருக்கும் வேளையில் டிசிஎஸ் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அனைத்து அசோசியட் ஊழியர்களையும் வாரத்தில் 5 நாட்களும் அலுவலகம் வர வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே கூறியது போல் பிற ஐடி சேவை நிறுவனங்களும் தனது ஊழியர்களை வாரத்தில் 5 நாட்களும் வர அழைக்க துவங்கியுள்ளது.
டிசிஎஸ் அறிவிப்பை தொடர்ந்து விப்ரோ, கேப்ஜெமினி, LTIMindtree ஆகியவை தனது ஊழியர்களை வாரத்தில் 5 நாட்களும் வர வேண்டும் என அறிவிக்க துவங்கியுள்ளது அல்லது வாரத்தில் 3- 4 நாட்கள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வர துவங்கியுள்ளது. இதன் மூலம் ரிமோட் வொர்க், வொர்க் ப்ரம் ஹோம் என பேச்சுகே இடமில்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது.

விப்ரோ, கேப்ஜெமினி, LTIMindtree நிறுவனங்களில் அணி வாரியாக, ப்ராஜெக்ட் வாரியாக வர்த்தக மாடலுக்கு ஏற்ப ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்க துவங்கப்பட்டு உள்ளது. இது வொர்க் ப்ரம் ஹோம் தான் வேண்டும் என வேலை வாங்கிய பலருக்கு பெரும் பிரச்சனையாக அமையலாம்.
டிசிஎஸ் அறிவிப்புக்கு பின்பு இந்தியாவில் பல ஐடி மற்றும் BPM நிறுவனங்களும், சில டெக்னாலஜி நிறுவனங்கள் வாய்மொழியாகவும், அதிகாரப்பூர்வமாக ஊழியர்களுக்கு கட்டாயம் வாரத்தில் 5 நட்களும் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஒட்டுமொத்த ஐடி துறையும், தற்போது சர்வதேச அளவில் நடக்கும் மேக்ரோ எக்னாமிக் பொருளாதார பிரச்சனையின் காரணமாக புதிய வர்த்தகத்தை பெறுவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஐடி ஊழியர்களை வைத்து தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் வர்த்தகத்தையும், வருமானத்தையும் ஈர்க்க திட்டமிட்டு உள்ளது. இதனாலேயே அனைத்து ஊழியர்களையும் அலுவலகம் வரவைப்பதில் உறுதியாக உள்ளது.
மேலும் புனே, பெங்களூர் போன்ற நாட்டின் பல ஐடி ஹப்-களில் இருக்கும் நிறுவனங்கள் வாரத்தில் 5 நாட்கள் அலுவலகம் வர வேண்டும் என அறிவித்துள்ளது. இதில் முன்னோடியாக இந்தியாவில் இருக்கும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. சமீபத்தில் எரிக்சன் மற்றும் பின்சர்வ் ஆகியவை இப்பட்டியலில் சேர்ந்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications