பெரும்பாலான இளைஞர்கள் ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்க்க அதிக ஆர்வமாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ஐ.டி. நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளம்தான், மற்ற துறைகளை காட்டிலும் ஐ.டி. துறையில் சம்பளம் அதிகம்.
இதேவேளையில் ஐ.டி. நிறுவனங்களில் அதிக சம்பளம் பெறுபவர்கள் பெரும்பாலும் தலைமை செயல் அதிகாரிகளாக இருப்பர். இந்தியாவின் ஐ.டி. துறையில் அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரி பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் விப்ரோவின் தலைமை செயல் அதிகாரி தியரி டெலாபோர்ட்.

விப்ரோ நிறுவனம் பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, தியரி டெலாபோர்ட் கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு சம்பளமாக ரூ.82 கோடி வாங்கியுள்ளார். நாட்டின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனங்களான டி.சி.எஸ்., இன்போசிஸ் மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளின் சம்பளத்தை காட்டிலும் தியரி டெலாபோர்டுக்கு விப்ரோ நிறுவனம் அதிக சம்பளத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் 2வது இடத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக் உள்ளார். இவர் கடந்த ஆண்டு ரூ.56.45 கோடியை ஊதியமாக பெற்றுள்ளார்.
டெக் மகிந்திராவின் சிபி குர்னானி மற்றும் டி.சி.எஸ். நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாத் முறையே ரூ.30 கோடி மற்றும் ரூ.29 கோடி சம்பாதித்துள்ளனர்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குனராக ஜீரோதா நிறுவனத்தின் நிறுவனர்கள் நிதின் காமத் மற்றும் நிகில் காமத் உள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு தலா ரூ.72 கோடி சம்பளமாக வீட்டுக்கு எடுத்து சென்றனர்.
தியரி டெலாபோர்ட்
2020 ஜூலை முதல் நாட்டின் நான்காவது பெரிய ஐ.டி. நிறுவனமான விப்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குனராக தியரி டெலாபோர்ட்பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு பிரான்ஸ் ஐ.டி. நிறுவனமான கேப்ஜெமினியில் சி.இ.ஓ.வாக இருந்தார்.
56 வயதான இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். சர்வதேச தகவல் தொழில்நுட்ப துறையில் நுணுக்கமான அறிவு மற்றும் 30 ஆண்டு கால அனுபவம் கொண்டவர். கடந்த 2022-23ம் நிதியாண்டில் விப்ரோ நிறுவனம் இவருக்கு ஆண்டு சம்பளமாக ரூ.82.40 கோடியை வழங்கியது.
1945ல் முகமது பிரேம்ஜியால் விப்ரோ நிறுவனம் தொடங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு, அந்த நிறுவனத்தை இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவரும், நன்கொடையாளருமான அசிம் பிரேம்ஜியால் கையகப்படுத்தப்பட்டது.
தற்போது அவர் இயக்குனர் குழுவில் நிர்வாகமற்ற உறுப்பினராக உள்ளார். அவரது மகன் ரிஷாத் பிரேம்ஜி தற்போது விப்ரோவின் செயல் தலைவராக உள்ளார். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே விப்ரோ நிறுவன பங்கின் விலை ரூ.420 என்ற அளவில் உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications