இந்திய தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ (Wipro) நிறுவனம், வருடாந்தர பணியாளர் ஊதிய விபரங்களை அமெரிக்கா பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தில் (US SEC) சமர்ப்பித்துள்ளது. இதில், தற்போதைய CEO மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றும் ஸ்ரீநிவாஸ் பல்லியா FY25-இல் (நிதியாண்டு 2024-25) ரூ.53.4 கோடி சம்பளம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2024 ஏப்ரல் மாதம் CEO ஆக பொறுப்பேற்ற ஸ்ரீநிவாஸ் பல்லியா, FY25-இல் ரூ.53.4 கோடி (அமெரிக்க டாலரில் 6.27 மில்லியன் டாலர்) சம்பளமாக பெற்றுள்ளார். இது நிர்வாகத் தலைவர் ரிஷாத் பிரேம்ஜியுடன் ஒப்பிடும் போது 4 மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டின் CEO திரி டெலாபோர்ட், ரூ.166 கோடி சம்பளத்துடன் இந்திய IT துறையில் அதிகமாக சம்பளம் பெற்ற CEO ஆக இருந்தார்.

விப்ரோ நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக உள்ள ரிஷாத் பிரேம்ஜியின் FY24-இல் ரூ.6.4 கோடி சம்பளமாக இருந்தது. ஆனால் FY25-இல் இது இரட்டிப்பாகி ரூ.13.7 கோடி (அமெரிக்க டாலரில் 1.6 மில்லியன் டாலர்) ஆக உயர்ந்துள்ளது. இதற்கான முக்கிய காரணம், FY25-இல் விப்ரோ நிறுவனம் நிகர லாபத்தில் வளர்ச்சி கண்டதால் தான். FY24-இல் நிறுவனத்தின் நிகர லாபம் குறைந்ததால், ரிஷாத் பிரேம்ஜிக்கு வழங்கப்பட வேண்டிய கமிஷன் வழங்கப்படவில்லை. இவர் பெற வேண்டிய கமிஷன், முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது அதிகரித்த நிகர லாபத்தின் 0.35% ஆகும். ஆனால் FY24-இல் நிகர லாபம் குறைந்ததால், கமிஷன் வழங்கப்படவில்லை.
விப்ரோ நிறுவனமும் அதன் துணை நிறுவனங்களும் FY23, FY24 மற்றும் FY25-இல் முறையே 2.5 லட்சம், 2.32 லட்சம் மற்றும் 2.3 லட்சம் பணியாளர்களைக் கொண்டிருந்தன. இதில் இந்தியாவுக்கு வெளியே உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது - FY23-இல் 49,000, FY24-இல் 41,000 மற்றும் FY25-இல் 38,000 ஆக இருக்கிறது. இது நிறுவனத்தின் வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் பணியாளர் மறுசீரமைப்பு காரணமாக ஏற்பட்ட மாற்றமாகக் கருதப்படுகிறது.
விப்ரோ பாரம்பரியமாக அதன் சர்வதேச சந்தைகளில் பணியாளர்களை பணியமர்த்துவதில் கவனம் செலுத்தி வந்தாலும், இப்போது அந்தந்த நாடுகளில் உள்ளூர் மக்களை மட்டுமே பணியமர்த்துகிறது. "சிறந்த திறமையான நபர்களை எங்கள் நிறுவனத்துக்கு ஆட்கள் ஆளுதல் என்பது முக்கிய குறிக்கோள். அதற்காகவே நாங்கள் உள்ளூர் நபர்களையே அதிகமாக ஆள்கிறோம்" என SEC ஆவணத்தில் தெரிவித்துள்ளனர்.
2024 ஜூலை மாதத்தில், விப்ரோ புதிய பங்குத் திட்டத்தை (employee stock options) அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ஊழியர்களுக்கான ஊக்க ஊதியமாக பங்குகள், செயல்திறன் சார்ந்த பங்குகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பங்குகள் வழங்கப்படுகின்றன. இது ஊழியர்களின் உழைப்பை மதித்து அவர்களுக்கு பங்குகளை வழங்கும் புதிய முயற்சியாகும். நிறுவனத்தின் அடுத்தடுத்த செலவுகளைக் குறைப்பதற்கான முக்கிய காரணம், FY24 இல் ஒருமுறை செய்யப்பட்ட பணியாளர் மறுசீரமைப்பு ஆகும். இதில் ரூ.383.8 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் மொத்த வருமான செலவில் 2.17% குறைவாகப் பதிவாகியுள்ளது.
FY25-இல் நிறுவனத்தின் ஊதிய செலவுகள் குறைந்துள்ளன. இதற்கான முக்கிய காரணம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது குறைந்த பணியாளர் எண்ணிக்கையாகும். ஆனால் ஊதிய உயர்வுகள் மற்றும் பதவி உயர்வுகள் காரணமாக சில செலவுகள் உயர்ந்துள்ளன.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications