இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ தனது சக நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் போல் அனைத்து ஊழியர்களும் பதவி வித்தியாசம் இல்லாமல் வாரத்திற்கு 3 நாள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் ஒட்டுமொத்த ஐடி ஊழியர்களும் லுங்கி, ஷார்ட்ஸ், நைட்டி, நைட் டிரெஸ் எல்லாம் தூக்கி போட்டுவிட்டு பார்மல் டிரஸ் வாங்க ஷாப்பிங் செல்ல துவங்கியுள்ளனர். அடுத்தடுத்து அனைத்து நிறுவனங்களும் வொர்க் இன் ஆஃபீஸ் முறையைக் கட்டாயமாக்கி வருவதால், இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

விப்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தீபாவளி பண்டிகை முடிந்து நவம்பர் 15 ஆம் தேதி முதல் அனைத்து ஊழியர்களும் ஹைப்ரிட் வொர்க் பாலிசி முறையை ஏற்று வாரத்திற்கு 3 நாள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து நவம்பர் 6 ஆம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் விப்ரோ நிர்வாகம் ஈமெயில் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் டிசிஎஸ் நிர்வாகம் அனைத்து அசோசியேட் ஊழியர்களையும் வாரத்தில் 5 நாளும் அலுவலகம் வர வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்தது. இது மட்டும் அல்லாமல் டிசிஎஸ் நிர்வாகம் அனைத்து அசோசியேட் ஊழியர்களும் கட்டாயம் ஃபார்மல் டிரஸ் கோட்-ஐ தான் பயன்படுத்த வேண்டும் என்ற கூடுதல் கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இன்போசிஸ் நிர்வாகம் பேன்ட் 5 மற்றும் 6 பிரிவில் இருக்கும் ஊழியர்கள் மாதத்தில் 10 நாளாவது அலுவலகம் வர வேண்டியதை கட்டாயமாக்கியுள்ளது, மேலும் ஆரம்பக்கட்ட மற்றும் நடுநிலை பதவிகளில் இருக்கும் ஊழியர்களுக்கு அணியின் தீர்மானம், அவர்களின் வாடிக்கையாளர் கட்டுப்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்களை அலுவலகம் வரவழைத்துள்ளது.

நவம்பர் 15 ஆம் தேதி முதல் அனைத்து ஊழியர்களும் ஹைப்ரிட் வொர்க் பாலிசி முறையை ஏற்று வாரத்திற்கு 3 நாள் கட்டாயம் அலுவலகம் வருவது மூலம் டீம்வொர்க் மேம்படுவது மட்டும் அல்லாமல், சக ஊழியர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற முடியும். இது விப்ரோ ஊழியர்கள் மத்தியிலான பணி கலாச்சாரத்தை மேம்படுத்தும் என விப்ரோ தலைமை மனித வள பிரிவு அதிகாரி சௌரப் கோவில் ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயிலில் தெரிவித்துள்ளார்.
விப்ரோ ஜனவரி 7 முதல் வொர்க் ப்ரம் ஹோம் பாசிலியை படிப்படியாக நீக்கி வருவது மூலம், விதிமுறையை மதிக்காத ஊழியர்கள் கட்டாயம் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications