இன்போசிஸ் நிறுவனத்தை தொடர்ந்து விப்ரோ-வும் இன்று 2026 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியிட்டது. இக்காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 1.2 சதவீதம் வருடாந்திர அடிப்படையில் வளர்ச்சி அடைந்து 3,246 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 3,209 கோடி ரூபாயாக இருந்தது.
இதேபோல் இக்காலாண்டில் செயல்பாட்டு வருவாய் 1.8 சதவீதம் உயர்ந்து 22,697 கோடி ரூபாயாக உள்ளது, இது முந்தைய ஆண்டின் 22,302 கோடி ரூபாயிலிருந்து அதிகமாகும்.

மேலும் டாலர் அடிப்படையில் விப்ரோவின் மொத்த வருவாய் 2,556.6 மில்லியன் டாலராக உள்ளது. அதன் முக்கிய பிரிவான ஐடி சேவைகளின் வருவாய் 2,604.3 மில்லியன் டாலராக உயர்ந்து, காலாண்டு அடிப்படையில் 0.7 சதவீத வளர்ச்சியையும், வருடாந்திர அடிப்படையில் 2.1 சதவீத வீழ்ச்சியையும் கண்டுள்ளது.
இதை தொடர்ந்து நிலையான நாணய அடிப்படையில், ஐடி சேவைகளின் வருவாய் காலாண்டு அடிப்படையில் 0.3 சதவீதம் உயர்ந்தாலும், வருடாந்திர அடிப்படையில் 2.6 சதவீதம் குறைந்துள்ளது. முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, நிகர லாபம் 2.5 சதவீதம் குறைந்து 3,246 கோடி ரூபாயாக உள்ளது, அதேசமயம் மொத்த வருவாய் 2.5 சதவீதம் உயர்ந்து 22,697 கோடி ரூபாயாக உள்ளது என அறிவித்துள்ளது.

விப்ரோ சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஹார்மன் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபார்மேஷன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை வாங்கியது. இதில் இருந்து எதிர்பார்க்கப்படும் வருவாயை சேர்க்கவில்லை என இந்நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இக்காலாண்டில் விப்ரோ நிறுவனம் மொத்தம் 4,688 மில்லியன் டாலர்கள் மத்திப்பிலான ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.இது காலாண்டு அடிப்படையில் 6.1 சதவீதம் குறைந்தாலும், வருடாந்திர அடிப்படையில் 30.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதில் பெரிய ஒப்பந்தங்களின் மதிப்பு 2,853 மில்லியன் டாலர்களாக உயர்ந்து, காலாண்டு அடிப்படையில் 6.7 சதவீதமும், வருடாந்திர அடிப்படையில் 90.5 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ இன்று காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது, பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும், செய்தியாளர்களிடம் பேசும் போது, தற்போது உலகளாவிய வாடிக்கையாளர்கள் மாறிவரும் வர்த்தக கொள்கைகளின் காரணமாக மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து வருகின்றனர் என குறிப்பிட்டார்.
வரி விதிப்பு காரணமாக உலகளவில் நிச்சயமற்ற சந்தையாக இருக்கும் காரணத்தால், நுகர்வோர், எனர்ஜி மற்றும் உற்பத்தித் துறைகளில் தொடர்ந்து பாதிப்பு இருந்து வருவதாகவும், இதனால் நிறுவனங்கள் தங்கள் சர்வதேச விநியோக சங்கிலிகளை தொடர்ந்து ஆய்வு செய்து பன்முகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாகவும், அக்டோபர் 16 அன்று நடைபெற்ற நிறுவனத்தின் வருவாய் பத்திரிகையாளர் சந்திப்பில் விப்ரோ சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநரான ஸ்ரீனிவாஸ் பல்லியா தெரிவித்தார்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications