இந்தியாவின் 4 வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ இன்று செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில் ஐடி பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் விப்ரோ முடிவுகளுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. விப்ரோ ஏற்கனவே ஊழியர்களுக்குப் பல்வேறு அதிர்ச்சி கொடுத்த நிலையில், தற்போது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
விப்ரோ Q2
செப்டம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 14.6 சதவீதம் உயர்ந்து 22,540 கோடி ரூபாயை பெற்றுள்ளது, ஆனால் லாபத்தில் சரிவை சந்தித்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபத்தின் அளவு 9.3 சதவீதம் சரிந்து 2600 கோடி ரூபாயை பெற்று உள்ளது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 2820 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்ரேட்டிங் மார்ஜின்
விப்ரோ நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் செப்டம்பர் காலாண்டில் சுமார் 1.6 சதவீதம் அதிகரித்து 15.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல் நிலையான நாணய மதிப்பீட்டில் விப்ரோ-வின் வருவாய் காலாண்டு அடிப்படையில் 4.1 சதவீதமும், வருடாந்திர அடிப்படையில் 12.9 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
பெரிய திட்டங்கள்
2023 ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் பெரிய திட்டங்களின் எண்ணிக்கை 42 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது, இதேபோல் மொத்த ஆர்டர் புக் செப்டம்பர் காலாண்டில் 24 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என விப்ரோ தெரிவித்துள்ளது.
வெளியேற்ற விகிதம்
மேலும் விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 23 சதவீதமாக உயர்ந்துள்ளது. இக்காலகட்டத்தில் சுமார் 10000 ஊழியர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதோடு அட்டிரிஷன் விகிதம் 3 காலாண்டுகளாகக் கணிசமான அளவில் குறைந்து வருகிறது.
டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் தற்போது 21.5 சதவீதமாக உள்ளது. இதேபோல் செப்டம்பர் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாப அளவீட்டில் முதல் முறையாக 10000 கோடி ரூபாய் என்ற அளவீட்டைத் தாண்டியுள்ளது டிசிஎஸ்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications