முன்னணி IT சேவை நிறுவனமான விப்ரோ 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடைந்த நான்காம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ரூ. 3,570 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. 2024-ஆம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட நான்காம் காலாண்டு முடிவுகளை விட தற்போது லாபம் அதிகரித்துள்ளது. 2024-ஆம் நிதியாண்டில் ரூ.3,290 கோடியாக இருந்த நிகர லாபம் இந்த முறை 26 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
2025-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் விப்ரோ நிறுவனம் ரூ.22,504 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஆனால் ஜனவரி 2024 முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தில் ரூ. 22,504 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 1 சதவீதம் அதிக லாபத்தை பதிவு செய்துள்ளது.

நான்காவது காலாண்டில் விப்ரோவின் ஐடி சேவைகள் பிரிவு ஈட்டிய மொத்த வருவாய் $2,596.5 மில்லியன். பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வருவாயை பொதுவாக அமெரிக்க டாலரில் குறிப்பிடுவது வழக்கம். இந்த வருவாய் கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் 1.2 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த காலாண்டில் 2.3% வருவாய் விகிதம் குறைந்திருக்கிறது.
கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் வரிக்கு பிந்தைய லாபம் 6 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ரூ.3,354 கோடி லாபம் பதிவாகியுள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் என்பது செலவுகள் மற்றும் வரி போக நிறுவனத்திற்கு கிடைக்கும் நிகர லாபத்தை குறிக்கிறது.
"2025-ஆம் நிதியாண்டில் 2 மிகப்பெரிய ஒப்பந்தங்களை பெற்றோம். இந்த ஒப்பந்தங்கள் நிறுவனத்திற்கு நீண்ட காலத்திற்கு வருவாயை தரக்கூடியதாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு திருப்தி தரக்கூடிய சேவைகளை வழங்கியுள்ளோம். இது எங்களின் சிறந்த செயல் திறனை பிரதிபலிக்கிறது" என்று விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீனி பாலியா கூறியுள்ளார்.
தொடர்ந்து செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல நிறுவனங்களும் பணிநீக்கங்களை கையில் எடுக்கும் வேலையில் அதிக நிகர லாபத்தை பதிவு செய்து விப்ரோ நிறுவனம் தனித்து நிற்கிறது. அதோடு வருமானம் அதிகமாக கிடைக்கும் சாதகமான சூழல் இல்லை என்றாலும் தங்களுடைய சேவையை சரியாக செய்வதில் கவனம் செலுத்தியதால் தான் இத்தகைய லாபத்தை பதிவு செய்ய முடிந்தது என்று நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலாண்டுகளிலும் இந்த லாப விகிதத்தை அப்படியே கொண்டு செல்ல முயற்சி செய்ய திட்டமிட்டுள்ளது.
4-ஆம் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகளில் இருந்து கிடைத்த பணம் ரூ.3,750 கோடியாக உள்ளது. அதாவது ஐடி சேவை வழங்குதல் மற்றும் பிற சேவைகளை வழங்குவது என தினசரி செயல்பாடுகளில் இருந்து விப்ரோ நிறுவனத்திற்கு கிடைத்த வருவாய் தான் இது. பெரிய பொருளாதார நிச்சயமற்றத் தன்மைக்கு மத்தியிலும் வாடிக்கையாளரின் தேவையைப் புரிந்து லாபகரமான வளர்ச்சியுடன் நிறுவனம் இயங்கி வருவதாக விப்ரோ நிறுவனத்தின் CEO கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications