இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ செப்டம்பர் காலாண்டில் லாப அளவில் 9 சதவீதத்தை சந்தித்தது.
இதனால் முதலீட்டாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர், இதன் எதிரொலியாக விப்ரோ நிறுவன பங்குகள் சுமார் 7 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் விப்ரோ நிர்வாகம் தனது ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ள முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ளது.
விப்ரோ
விப்ரோ நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களுக்குக் கடந்த காலாண்டுக்கான பேமெண்ட் கொடுக்கப்படாத நிலையிலும், கல்லூரியில் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரிகளைப் பணியில் சேர்க்காமல் பணி நியமனத்தை ரத்து செய்துள்ள நிலையிலும் அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிதாக ஒரு 5 ஆண்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
5 ஆண்டுத் திட்டத்தை
இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் விப்ரோ புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்களை அடிப்படையாக வைத்து தனது வர்த்தகத்தை அடுத்த 5 முதல் 10 ஆண்டுக் காலம் மேம்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக விப்ரோ நிறுவன பணியில் சேரும் பிரஷ்ஷர்களுக்கான 5 ஆண்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
சம்பளம்
அதாவது விப்ரோ நிறுவனத்தில் ஒரு பிரஷ்ஷர் பணியில் சேர்ந்தால் அடுத்த 5 வருடத்திற்கு அவருடைய சம்பளம் எப்படி இருக்கும், சம்பள உயர்வு எப்படி இருக்கும், போன்ஸ் தொகை போன்றவற்றைக் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
மூன்லைட்டிங்
இதேவேளையில் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு இருக்கும் போதே வேறு நிறுவனத்தில் பணியாற்றினால் அதாவது மூன்லைட்டிங் செய்பவர்களைக் கண்டுபிடிக்க பிராவிடென்ட் பண்ட் தகவல்கள் செக் செய்வது உட்பட, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உடன் பணியாற்றுவது எனப் பல திட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சௌரப் கோவில்
இந்த 5 ஆண்டுத் திட்டம் குறித்து அனைத்து பிரஷ்ஷர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது என விப்ரோ நிறுவனத்தின் தலைமை மனித வள பிரிவு அதிகாரியான Saurabh Govil தெரிவித்துள்ளார்.
15000 பிரஷ்ஷர்கள்
விப்ரோ நிறுவனம் முதல் 6 மாதத்தில் சுமார் 15000 பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்த்துள்ளதாகவும், இதில் 85 சதவீதம் பேருக்கு 100% வேரியபிள் பே கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அட்ரிஷன் விகிதம்
செப்டம்பர் காலாண்டு முடிவுகள் படி விப்ரோ நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 23 சதவீதமாக உள்ளது, இதுவே ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் 23.8 சதவீதம், டிசிஎஸ் நிறுவனத்தில் 21.5 சதவீதமாக உள்ளது. இந்த அளவீட்டை கட்டுப்படுத்தவே 5 ஆண்டுத் திட்டம் மூலம் பிரஷ்ஷர்களுக்கு நம்பிக்கை அளிக்கப்படுகின்றது.
More From GoodReturns

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications