நாளை முதல் வாரத்துக்கு 2 நாள் ஆபீஸ் வரணும்.. ரிஷாத் பிரேம்ஜி அதிரடி ட்வீட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் காரணமாக பல நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கூறின. குறிப்பாக ஐடி துறையில் இந்த விகிதமானது மிக அதிகம் எனலாம்.

கிட்டதட்ட 2 வருடங்களாக பணியாற்றி வரும் ஊழியர்கள், தற்போது தான் அலுவலகம் திரும்ப தொடங்கியுள்ளனர். தற்போது கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கி இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாலும், மூன்றாவது அலையில் தாக்கம் என்பது கவலையளிக்கும் விதமாக இருந்து வருகின்றது.

இதற்கிடையில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் கொண்டு வீட்டில் இருந்து பணியாற்றி வரும் ஊழியர்கள், தற்போது பெரு நகரங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

அலுவலகம் வாங்க

அலுவலகம் வாங்க

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைத்து வருகின்றன. இதற்கிடையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம், நாளை முதல் அதன் ஊழியர்களை வாரத்தில் இரண்டு நாட்கள் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

18 மாதங்களுக்கு பிறகு அலுவலகம் வரும் ஊழியர்கள்

18 மாதங்களுக்கு பிறகு அலுவலகம் வரும் ஊழியர்கள்

இது குறித்து விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிசாத் பிரேம்ஜி அவரது ட்விட்டர் பக்கத்தில், 18 மாதங்களுக்கு பிறகு, எங்களது தலைவர்கள் அலுவலகம் வரப்போகிறார்கள். அவர்கள் வாரத்திற்கு இரு நாட்கள் வருவார்கள். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அனைவரும் பாதுகாப்பாகவும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வாருங்கள். நாங்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுள்ளோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

வீடியோ பகிர்வு

வீடியோ பகிர்வு


அதோடு தனது ட்விக்கர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அதில் ஊழியர்களின் பாதுகாப்பினை கடைபிடிக்கும் பல்வேறு விதமாக நடவடிக்கைளை எடுத்துள்ளதையும் அந்த வீடியோவில் சுட்டிக் காட்டியுள்ளது. அதில் ஊழியர்களுக்கு வெப்ப நிலையை பார்ப்பது, கியூ.ஆர் கோடு மூலமாக ஸ்கேன் செய்வது. முகக்கவசம், தனி மனித இடைவெளி என பல அம்சங்களை அந்த வீடியோவில் சுட்டிக் காட்டியுள்ளார்.

விப்ரோவின் வருடாந்திர கூட்டம்

விப்ரோவின் வருடாந்திர கூட்டம்

கடந்த ஜூலை 14 அன்று நடந்த விப்ரோவின் வருடாந்திர கூட்டத்தில், தனது நிறுவனத்தின் 55% ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக அறிவித்தது. விப்ரோவில் தற்போது 2 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில், கொரோனாவின் தாக்கம் மத்தியில், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் படி விரைவில் விப்ரோ செயல்படுத்தியது.

வாடிக்கையாளர்கள் வெற்றி

வாடிக்கையாளர்கள் வெற்றி

அதன் உலகளாவிய மொத்த பணியாளர்களில் 3% குறைவானர்கள் மட்டுமே அலுவகலத்தில் இருந்து பணிபுரிந்து வந்தாகவும் பிரேம்ஜி குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளை தடைபடாமல் கொடுத்துள்ளோம். தொடர்ந்து அவர்களை வெற்றி பெற செய்துள்ளோம். இதனால் அவர்களின் நம்பிக்கை எங்களுக்கு கிடைத்துள்ளது.

கலப்பின மாடல் பணி

கலப்பின மாடல் பணி

மேலும் இந்த கலப்பின மாடல் எங்களுக்கு நன்கு கைகொடுத்துள்ளது. இது எதிர்காலத்தில் எங்களுக்கு நன்கு கைகொடுக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நிபுணர்கள் இந்த கலப்பின மாதிரி நன்கு கைகொடுக்கும். ஊழியர்கள் சில நாட்கள் அலுவலகம் வந்தாலும், சில நாட்டில் வீட்டில் இருந்து பணிபுரிவார்கள். இது நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நன்மையை கொடுக்கும் என நம்புகின்றனர்.

பெண்களின் பங்கினை அதிகரிக்கும்

பெண்களின் பங்கினை அதிகரிக்கும்

குறிப்பாக டயர் 3 மற்றும் டயர் 4 நகரங்களில் வேலை வாய்ப்பினை இது உருவாக்கும். வீட்டில் இருந்தே பணியாற்றும் நெகிழ்வுத் தன்மை என்பது, அதிக பெண்களை பங்கேற்பை ஊக்குவிக்கும். இது ஊழியர்களுக்கு ஒரு நெகிழ்வை கொடுக்கும். மொத்தத்தில் நிறுவனங்கள் இதனால் மேற்கொண்டு வளர்ச்சி காணும் என்றும் ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றன.

டிசிஎஸ்-ன் அறிவிப்பு

டிசிஎஸ்-ன் அறிவிப்பு

சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு, இதே போன்ற ஒரு அறிவிப்பினை கொடுத்தது. அதில் தற்போது 5,00,000 ஊழியர்கள் உள்ள நிலையில் பெரும் பகுதி ஊழியர்களை இந்த வருடத்தின் இறுதிக்குள் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

டிசிஎஸ் - ராஜேஷ் கோபிநாதன்

டிசிஎஸ் - ராஜேஷ் கோபிநாதன்

இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன், அப்போது நடப்பு ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்திற்குள் 70 முதல் 80% ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க உள்ளதாக முடிவு செய்துள்ளது. இது கொரோனா பரவல் அடிப்படையில் இறுதி முடிவு செய்யப்படும் என கூறியிருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wipro’s chairman rishad premji said our leaders to start returning to office from tomorrow

wipro latest work from updates..Wipro’s chairman rishad premji said our leaders to start returning to office from tomorrow
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X