ஐடி துறையில் இன்றளவிலும் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய கூறி வருகின்றன. சில நிறுவனங்கள் படிப்படியாக அலுவலகம் வருவோர் எண்ணிக்கையை உயர்த்தி வருகின்றன. சில நிறுவனங்கள் ஹைபிரிட் மாடலை பின்பற்றி வருகின்றன.
ஊழியர்கள் ஒரு பகுதியினர் அலுவலகம் சென்று பணிபுரிவதே சிறந்தது என்று கூறினாலும், பெரும்பாலும் வீட்டில் இருந்து பணிபுரிவதையே விரும்புகின்றனர்.
அலுவலகம் வரணும்
இது குறித்து விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, தங்களது ஊழியர்கள் சிறிது காலம் அலுவலகம் வருவதையே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
நாஸ்காம் ப்ராடக்ட் கான்க்ளேவ் 2022 (Nasscom Product Conclave 2022) கூட்டத்தில் பேசிய பிரேம்ஜி, இது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
சவாலான நிலை
கொரோனாவுக்கு பின்பு நிறுவனத்திற்குள் ஒரு இணைப்பினை உருவாக்க நிறுவனம் எதிர்கொண்டுள்ள சவால்களை பற்றி கூறியவர், அது மிகப்பெரிய சவால் என கூறியுள்ளார்.
ஊழியர்கள் அனைவரும் சிறிது காலம் அலுவலகம் வரவேண்டும். நாங்கள் அனைத்து நேரத்திலும் அலுவலகம் வரக் கூறவில்லை. நிறுவனமும் அதனை விரும்பவில்லை. இது குறித்து உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருக்க முடியாது. எனினும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சந்தேகம் தான்
மொத்தத்தில் தற்போதைக்கு அலுவலகமும் சில நாட்கள் வரவேண்டிருக்கும். வீட்டில் இருந்தும் பணிபுரியும் சூழல் இருக்கும் எனலாம்.
எனினும் இது நிரந்தரமாக இருக்குமா? என்பது பெரும் கேள்வியாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் மூன்லைட்டிங் குறித்து ஏற்கனவே பணி நீக்கம் செய்துள்ள விப்ரோ., இனி அதனை கடுமையாக கண்கானிக்கலாம். இதனால் வீட்டில் இருந்து பணி புரியும் ஆப்சன் குறித்து யோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹேப்பி நியூஸ்
அப்படியும் வீட்டில் இருந்தோ அல்லது ஹைபிரிட் மாடல் பணியோ கொடுத்தாலும் கூட, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு ஊழியர்கள் ஒரே நிறுவனத்தில் பணிபுரிவதை உறுதி செய்யும் விதமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எது எப்படியோ தற்போதைக்கு ஹைபிரிட் மாடல் பணி என்பது ஊழியர்களுக்கு கொண்டாட்டமான விஷயம் தான்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications