விப்ரோ அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் ஷாக்..!! ஒரு நிமிடம் குறைந்தாலும் அரை நாள் லீவ் கட்..!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கான பணி நேரத்தில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. வொர்க் ப்ரம் ஹோம் முறையில் இருந்து ஹைப்ரிட் கொள்கைக்கு மாறினாலும் ஊழியர்களின் செயல்திறன் பெரிய அளவை உயர்த்த வேண்டும் என ஐடி நிறுவனங்கள் அனைத்தும் திட்டம்போட்டு பணியாற்றி வருகிறது.

சமீபத்தில் காக்னிசென்ட் ஊழியர்களை புதிய சாப்ட்வேர் மூலம் கண்காணிக்கப்படுவதாக அறிவித்தது யாராலும் மறக்க முடியாது, இது ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்ப்பு இருந்தாலும், நிர்வாக அளவில் இருக்கும் ஊழியர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் விப்ரோ நிர்வாகம் ஊழியர்களின் பணி நேரத்தில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

விப்ரோ அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் ஷாக்..!!  ஒரு நிமிடம் குறைந்தாலும் அரை நாள் லீவ் கட்..!

ஜனவரி 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது, ஹைப்ரிட் மாடல் கீழ் ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வருவது இயல்பான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் விப்ரோவில் அலுவலகத்தில் இருக்கும் நேரத்தில் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லை.

இதில் முக்கியமான மாற்றம் வந்துள்ளது, அதாவது இனி ஒவ்வொரு ஊழியரும் அலுவலகத்திற்கு வரும் 3 நாளில் குறைந்தது ஆறு மணி நேரம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சுமார் 234,000 ஊழியர்களைக் கொண்ட இந்த நிறுவனம், ஹைப்ரிட் பணி முறையைத் தொடர்ந்தாலும், அலுவலக வருகைக்கும், பணிநேரத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த மாற்றங்கள் ஊழியர்களின் விடுமுறை நாட்களையும் பாதிக்கும் வகையில் உள்ளன.

ஊழியர்கள் கவலை

விப்ரோ நிறுவனத்தில் முன்பு வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலக வந்தால் போது, அலுவலகத்தில் இருக்கும் நேரம் மிகவும் Flexible ஆக இருந்தது. இப்போது அலுவலகத்தில் நுழைந்து வெளியேறும் நேரத்திற்கு மத்தியில் குறைந்தது ஆறு மணி நேரம் இருக்க வேண்டும் என்று புதிய விதி வந்துள்ளது.

இதை பூர்த்தி செய்யாத ஊழியர்களின் விடுமுறை இருப்பில் விடுமுறை கழிக்கப்படும். உதாரணமாக, ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை கழிக்கப்படும். இந்த விதி இந்தியாவில் உள்ள அனைத்து விப்ரோ ஊழியர்களுக்கு பொருந்தும்.

வொர்க் ப்ரம் ஹோம் முறை
விப்ரோ நிறுவனம் முன்பு ஆண்டுக்கு 15 நாட்கள் தற்காலிக ரிமோட் வொர்க் வசதியை அளித்தது. இப்போது அதை 12 நாட்களாக குறைத்துள்ளது. இந்த 12 நாட்களை தனிப்பட்ட காரணம், உடல்நலக் குறைவு அல்லது குடும்ப உறுப்பினர்களை கவனிப்பதற்காக பயன்படுத்தலாம்.

விப்ரோ நிர்வாகம்
இந்த நிலையில் விப்ரோ நிர்வாகம் ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயிலில், நிறுவனத்தில் ஹைப்ரிட் பணி முறைதான் எதிர்கால பணி முறை என்று தெரிவித்துள்ளது. மேலும் ஆறு மணி நேரம் அலுவலகத்தில் இருப்பது குறைந்தபட்சம் என்றாலும், தினசரி பணி நேரம் 9.5 மணி நேரமாகவே உள்ளது என்றும் விளக்கமளித்துள்ளது.

மீதமுள்ள நேரத்தை வீட்டிலிருந்து பணியாற்றி, வேலைகளை முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த மாற்றங்கள் ஊழியர்களிடையே புதிய சவால்களை ஏற்படுத்தினாலும், நிறுவனம் பணித்திறனை மேம்படுத்துவதாகக் கருதுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+