இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வை கொடுத்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் சம்பள உயர்வுகளை வெளியிட உள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
அடுத்த சில நாட்களில் விப்ரோ தனது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ள நிலையில், தற்போது ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எப்போது கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பொங்களூர்-ஐ தலைமையிடமாக கொண்டு இயங்கும் விப்ரோ டிசம்பர் 1 ஆம் தேதி முதல் MSI என அழைக்கப்படும் அதன் வருடாந்திர மெரிட் சேலரி இன்கிரீசஸ் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த சம்பள உயர்வு செப்டம்பர் காலாண்டில் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் விப்ரோ நிர்வாகம் சுமார் 1 காலாண்டு தாமதமாக தனது ஊழியர்களுக்கு அளிக்க உள்ளது. விப்ரோ நிறுவனம் இந்த தாமதத்திற்கு ஐடி துறையின் வர்த்தகத்தை பாதித்த மேக்ரோ எக்னாமிக் பிரச்சனை மற்றும் மார்ஜின் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி வருகிறது.
இதுகுறித்து விப்ரோ நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு அதிகாரியான சௌரப் கோவில் விப்ரோ நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயிலில் மோசமான சர்வதேச சந்தை பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தாலும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சம்பள உயர்வு அதாவது MSI அமலாக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பள உயர்வு ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் வழங்கப்படும். மேலும் சம்பள உயர்வு ஒரு ஊழியரின் சம்பளம், பதவி, டார்கெட்-கள் பூர்த்தி செய்வதன் அடிப்படையில் மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான ஜதின் தலால் இந்நிறுவனத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய பின்பு புதிய வாய்ப்புக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியாகி அடுத்த சில நாட்களில் அமெரிக்க சாப்ட்வேர் நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் இவரை புதிய தலைமை நிதி அதிகாரியாக நியமித்தது.
ஜதின் தலால் வெளியேற்றம் இந்திய ஐடி சேவை துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்ல.
More From GoodReturns

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

கோடிகளில் புரளும் கோலிவுட்! சூப்பர் ஸ்டார் vs தளபதி - இந்தியாவின் காஸ்ட்லி நடிகர் யார்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications