இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோ. டிசிஎஸ், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்ந்து பெருமளவில் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வரும் நிறுவனம் இது. இந்நிறுவனத்தின் தலைவர் ரிஷத் பிரேம்ஜி , நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையுடன் முதலீட்டாளர்களுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
2024 ஆம் நிதியாண்டு விப்ரோ நிறுவனத்திற்கு மிகவும் சவாலான ஒரு ஆண்டாக இருந்தது என ரிஷத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார். விப்ரோ நிறுவன வரலாற்றிலேயே 2024 ஆம் ஆண்டு மிகவும் சவாலான ஆண்டாக இருந்தது, சர்வதேச அளவில் பொருளாதார சூழல் மிகவும் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டதே இதற்கு காரணம் என தெரிவித்தார்.

இருப்பினும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் எதிர்காலத்திற்கான முதலீட்டை தொடர்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார். குறுகிய கால சவால்களை முதலீட்டாளர்கள் பெரிய பிரச்னையாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் விப்ரோ நிறுவனத்தின் அடிப்படை மாறாமல் அப்படியே தான் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டை பொறுத்தவரை விப்ரோ நிறுவன தலைமையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இது நிறுவனத்தின் செயல் திறன், வருமானம் மற்றும் லாபம் ஆகியவற்றிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த தியரி டெலபோர்ட் பதவி விலகினார், இதனை அடுத்து ஸ்ரீனிவாச பள்ளியா ஏப்ரல் மாதம் முதல் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்தியாவில் செயல்பட்டு வரக்கூடிய நான்கு முக்கிய ஐடி சேவை நிறுவனங்களில் கடந்த ஆண்டில் விப்ரோ நிறுவனத்திற்கு மட்டும்தான் வருமானம் குறைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு விப்ரோ நிறுவனத்தின் வருமானம் 4.4% என குறைந்தது. டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் 29.1 பில்லியன் டாலர், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாய் 18.6 பில்லியன் டாலர், ஹெச் சி எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் 13.3 பில்லியன் டாலர் என உயர்வை கண்டது. ஆனால் விப்ரோவின் வருவாய் மட்டும் சரிவடைந்துள்ளது.
இதனிடையே தங்களது நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்திற்கு மாறுவதில் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது என பிரேம்ஜி கூறியுள்ளார். தங்கள் நிறுவனத்தின் உள் செயல்பாடுகளுக்கு ஜெனரேட்வ் ஏஐ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்திருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் விப்ரோ நிறுவனம் கிட்டத்தட்ட 30000 ஊழியர்களுக்கு நவீன செயற்கை நுண்ணறிவுக்கான பயிற்சியை வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். WiNow எனப்படும் தங்களின் சாட்பாட் அடிப்படையிலான ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பம், ஊழியர்களின் செயல் திறனை மேம்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications