ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி கூட்டணி நிறுவனமான தைவான் நாட்டின் விஸ்திரான் கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் அமைத்திருக்கும் தொழிற்சாலையில் சில நாட்களுக்கு முன் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்ட ஊதிய வழங்குவதில் பிரச்சனை ஆனது.
இதனால் கோபம் அடைந்த விஸ்திரான் ஊழியர்கள் இணைந்து தொழிற்சாலையை அடித்து உடைத்துப் பல பொருட்களை நாசம் செய்தனர். இந்நிலையில் தற்போது சேதம் அடைந்த அனைத்தையும் விஸ்திரான் சரி செய்து உற்பத்தியை முழுமையாகத் துவங்கியுள்ளது.
ஊழியர்கள் தாக்குதல் காரணமாக விஸ்திரான் தொழிற்சாலை டிசம்பர் 12ஆம் தேதி முதல் உற்பத்தி பணிகள் முடங்கியும், தொழிற்சாலை மூடப்பட்டும் இருந்தது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய உற்பத்தி இலக்கில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மார்ச் 8ஆம் தேதி முதல் கோலார் மாவட்டத்தில் நாரசாபுராவில் இருக்கும் தொழிற்சாலை முழுமையாக இயங்க துவங்கியுள்ளது எனக் கர்நாடக மாநிலத்தின் பெரு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊழியர்கள் தாக்குதலைத் தொடர்ந்து விஸ்திரான் நிறுவனத்தின் துணைத் தலைவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முறையாகச் சம்பளம் அளிக்கப்படாதது தெரிய வந்துள்ளது. இதற்கு விஸ்திரான் ஊழியர்களிடம் மன்னிப்பும் கேட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.