சொந்த வீடு, குழந்தைகளின் கல்வி மற்றும் ஓய்வூதிய திட்டமிடல் என பல இலக்குகளை மனதில் வைத்து முதலீடுகளை மேற்கொள்ளும் நடுத்தர மற்றும் மூத்த வயதுடையோரின் கேள்விகளுக்கு, நிதிச் சந்தை நிபுணர்கள் முக்கியமான ஆலோசனைகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர். நிரந்தர வைப்புத் தொகைகளில் உள்ள முதலீட்டை எப்படி லாபகரமாக மாற்றுவது மற்றும் சரியான சேமிப்பு விகிதம் என்ன என்பது குறித்து அவர்கள் விளக்கியுள்ளனர்.
கேள்வி 1 : எனக்கு இப்போது 50 வயது ஆகிறது. நிரந்தர வைப்புத் தொகைகளில் ரூ.80 லட்சம் முதலீடு செய்துள்ளேன். என் மாத செலவு ரூ.60,000. சொந்த வீடு மற்றும் விரைவில் கார் வாங்க திட்டமிட்டுள்ளேன். 5 ஆண்டுகளில் (55 வயதில்) ஓய்வு பெற, நான் எவ்வளவு கூடுதலாக சேமிக்க வேண்டும்..?

நிபுணர் பதில் (ருஷப் தேசாய், Rupee With Rushabh Investment Services) : உங்கள் முதலீடான நிரந்தர வைப்புத் தொகைகள் இரண்டு முக்கியமான விஷயங்களை செய்யாது. அவை பணவீக்கத்தை முறியடிக்கும் வருமானத்தை கொடுக்காது. மேலும், அவை வரிச் சலுகையும் அளிக்காது. எனவே, நீங்கள் ஓரளவு பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
குறைந்த ரிஸ்க் முதலீடு : நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றால், ஈக்விட்டி சேவிங்ஸ் ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இவற்றில் 25% மட்டுமே பங்குச் சந்தையில் இருக்கும். மீதமுள்ளவை பாதுகாப்பான கடன்கள் மற்றும் இதர முதலீடுகளில் இருக்கும்.
வருமானக் கணிப்பு : நீங்கள் ரூ.80 லட்சம் முதலீட்டில், ஆண்டுக்கு சராசரியாக 9% கூட்டு வளர்ச்சி கிடைக்கும் என்று வைத்துக் கொண்டால், 5 ஆண்டுகளில் உங்கள் மொத்த தொகை ரூ.1.23 கோடியாக உயரும்.
ஓய்வூதிய வாழ்க்கை : இதே 9% வருமானம், மற்றும் ஆண்டிற்கு 7% பணவீக்கம் என்ற அடிப்படையில், நீங்கள் மாதாந்திர திட்டமிட்ட திரும்பப் பெறும் திட்டத்தின் (SWP) மூலம் மாதத்திற்கு ரூ.60,000 திரும்பப் பெற்றால், நீங்கள் 75 வயது வரை (அதாவது 20 ஆண்டுகள்) உங்கள் செலவுகளை சமாளிக்க முடியும்.
ஆலோசனை : இந்த எல்லா கணக்கீடுகளும் வரிக்கு முந்தையவை. நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால், நீங்கள் 60 வயதில் ஓய்வு பெறலாம். அதற்கு முன்பு உள்ள 10 ஆண்டுகளில் அதிக ரிஸ்க் எடுத்து பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்ட முயற்சி செய்யலாம்.
கேள்வி 2 : எனக்கு 42 வயது ஆகிறது. என் மனைவியின் வயது 39. எங்களுக்கு பள்ளி செல்லும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரூ.45 லட்சம் வீட்டுக் கடன் உள்ளது. எங்கள் இருவரின் மொத்த மாத வருமானம் ரூ.2.2 லட்சம். இதில் மாதம் ரூ.40,000 மட்டுமே சேமிக்கிறோம். குழந்தைகளின் கல்வி மற்றும் 60 வயதில் ஓய்வு போன்ற இலக்குகளை அடைய, நாங்கள் கடன் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகளை எப்படி சமநிலைப்படுத்த வேண்டும்..?
நிபுணர் பதில் (தில்ஷாத் பில்லிமோரியா, Dilzer Consultants) : உங்கள் நிகர மாத வருமானத்தில் 30% முதல் 35% வரை முதலீடுகளுக்கு ஒதுக்குவதே சரியான இலக்கு. உங்கள் ரூ.2.2 லட்சம் வருமானத்திற்கு, மாத சேமிப்பு ரூ.75,000 முதல் ரூ.77,000 வரை இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் தற்போது ரூ.40,000 மட்டுமே சேமிக்கிறீர்கள் (வருமானத்தில் 18%). இதை நீங்கள் உயர்த்த வேண்டும்.
செலவு கட்டமைப்பு : உங்கள் வீட்டுக் கடனுக்கான மாத தவணை தோராயமாக ரூ.45,000 இருக்கும். உங்கள் வீட்டுச் செலவுகள் மாதத்திற்கு சுமார் ரூ.75,000 இருக்கலாம்.
அவசர நிதியம் முக்கியம் : முதலில் செய்ய வேண்டியது, அவசர நிதியம் உருவாக்குவதுதான். மருத்துவச் செலவுகள், வேலை இழப்பு போன்ற எதிர்பாராத செலவுகளுக்காக, அடுத்த ஓராண்டிற்கு நீங்கள் மாதந்தோறும் சுமார் ரூ.23,000 ஒதுக்கி, ரூ.2.76 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை ஒரு திரவ நிதியை உருவாக்க வேண்டும். இதுதான் எந்தவொரு நிதித் திட்டத்திலும் முதல் மற்றும் மிக முக்கியமான படியாகும்.


Click it and Unblock the Notifications