உலக நாடுகள் தங்களுடைய ஆயுத பலத்தை நிரூபணம் செய்வதற்காக அணு ஆயுதங்களை தயாரித்து வைத்திருக்கின்றன. இந்தியா கூட அணு ஆயுதத்தை தயாரித்து வைத்திருக்கிறது. உலக அளவில் அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்கள் இருக்கும் நாடாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இருக்கின்றன.
இந்த நாடுகள் தேவையில்லாமல் அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதை குறைக்கும் நோக்கிலும் மேற்கொண்டு இவை அணு ஆயுதங்களை மேம்படுத்துவதை கட்டுப்படுத்தவும் தான் இந்திய அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே ஒரு அணு ஆயுத ஒப்பந்தம் என்பது ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்கா ரஷ்யா இடையிலான இந்த அணு ஆயுத ஒப்பந்தம் நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு அணுசக்தி நாடுகளுக்கு இடையே இருக்கும் கடைசி பன்னாட்டு ஒப்பந்தம் இது. இந்த ஒப்பந்தம் வரக்கூடிய வியாழக்கிழமை நள்ளிரவோடு காலாவதியாக இருக்கிறது. கடந்த 2010 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் இரண்டு நாடுகளும் தங்களுடைய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதை உறுதி செய்தது.
அதாவது இரண்டு நாடுகளும் 1550 அணு ஆயுதங்கள் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என ஒரு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவது குறித்து கடந்த செப்டம்பரில் பேட்டி அளித்த ரஷ்ய அதிபர் புதின் ஓராண்டுக்கு இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்தார். ஆனால் இது தொடர்பாக டிரம்ப் இதுவரை தீர்மானமான பதிலை தெரிவிக்கவில்லை.
அமெரிக்கா அரசாங்கம் தற்போது சீனாவும் வேகமாக அணு ஆயுதங்களை மேம்படுத்தி வருவதால் இந்த நியூ ஸ்டார்ட் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ரஷ்யா என இரண்டு நாடுகள் மட்டும் இல்லாமல் சீனாவையும் கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறது. சீனாவை இந்த ஒப்பந்தத்திற்குள் கொண்டு வந்து விட்டால் அந்த நாடு அணு ஆயுதங்கள் மேம்படுத்துவதை கட்டுப்படுத்தலாம் என நினைக்கிறார் டிரம்ப். ஆனால் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தைகளையும் இந்த மூன்று நாடுகளும் இதுவரை தொடங்கவே இல்லை.
கூடிய விரைவில் இந்த ஒப்பந்தமும் முடிவடையும் இருப்பதால் அமெரிக்கா ரஷ்யா இருநாடுகளுக்கும் இடையே அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் சட்டபூர்வமான கட்டுப்பாடு இல்லாமல் போகும். இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத போட்டி உருவாக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் மோதல் போக்கு நீடிக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இருந்தெல்லாம் வெளியில் வந்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவுக்கே முதல் உரிமை என்ற முழக்கத்தை நோக்கி தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த சூழலில் மீண்டும் ஒரு அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் அவர் ஈடுபடுவாரா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இது உலக அளவில் ஒரு அணு ஆயுதப்போரை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
More From GoodReturns

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications