கேரளத்தை சேர்ந்தவர் லட்சுமி ராஜ். தனது கணவர் அஜின் அபுதாபியில் வேலை பார்த்ததால் அவரும் அங்கு ஐந்து ஆண்டுகள் வசித்து வந்தார். அதன் பின்னர் அவர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர். கேரளத்தில் அபுதாபி போல இன்ஸ்டன்ட் உணவுப் பொருட்கள் கிடைக்காததால் கடும் சிரமத்துக்கு ஆளானார்.
இதனிடையே கேரளத்தில் தயாரிக்கப்படும் உணவுகளில் பெரும்பாலும் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் , தேங்காய் துருவலைப பயன்படுத்துவதை பார்த்தார். இதற்காக ஒவ்வொரு முறையும் தேங்காயை பாரம்பரிய முறையில் துருவுவது பெரிய கஷ்டமாக இருந்தது லட்சுமிக்கு.

இதைத் தொடர்ந்து அவர் 2016 ஆம் ஆண்டில் ஈஸி அன் பிரஷ் என்ற உணவுத் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்தார். இதற்காக அவர் வங்கியில் ரூ.5 லட்சம் கடனாக வாங்கி தொழிலை தொடங்கினார். தொழிலுக்கு வேண்டிய தேங்காய்களை உள்ளூர் விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு கொள்முதல் செய்தார்.
இப்போது அவரது தயாரிப்புகளை கேரள மாநிலம் முழுவதும் உள்ள சூப்பர் மார்க்கெட்களுக்கு சப்ளை செய்கிறார் லட்சுமி. 100 கிராம் தேங்காய் துருவலை ரூ.33க்கும் 200 தேங்காய் துருவலை ரூ.46க்கும் விற்கிறார். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் தேங்காய் துருவல் 5 நாட்களுக்கு கெட்டுப் போகாது என்கிறார் லட்சுமி.
தேங்காய் துருவல் தவிர அவர் தேங்காய் சட்னி பவுடர், வறுத்தரைச்ச சிக்கன் மசாலா பவுடர், வெர்ஜின் தேங்காய் எண்ணெய், உறையவைக்கப்பட்ட தேங்காய் சில், தீயல் மசாலா ஆகியவற்றையும் தயாரித்து லட்சுமி விற்கிறார்.
எனது தயாரிப்புகளின் விற்பனை மூலம் மாதம் 1 லட்சம் ரூபாய்க்கு மேலாக சம்பாதிக்கிறேன். இந்த வியாபாரம் நன்றாக நடைபெறுவதால் புதிது புதிதாக தயாரிப்புகளை உருவாக்கி விற்க திட்டமிட்டுள்ளேன் என்று லட்சுமி கூறுகிறார். இல்லத்தரசியாக இருந்த லட்சுமி தனது கணவர் ஆதரவுடன் தெம்பு பெற்று இப்போது ஒரு சாதனை பெண் தொழிலதிபராக ஆகிவிட்டார்.
ஐக்கிய அரபு அமீரக நாடான அபுதாபியில் ஏதாவது ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த லட்சுமியின் கனவு அவரது சொந்த ஊரில் நனவாகியதில் மிகுந்த பெருமையாக உள்ளது.
Story written by: Jayachandran
More From GoodReturns

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!



Click it and Unblock the Notifications