இந்தியாவில் பெருநிறுவன முதலாளிகள் அனைவரும் வாரத்தில் 70 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டும், ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வேலை செய்ய வேண்டும் என ஊழியர்களை அறிவுறுத்தி வரக்கூடிய இந்த நிலையில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வொர்க் லைஃப் பேலன்ஸ் (work life balance) மிகச் சிறப்பான முறையில் பின்பற்றப்படுவது தெரிய வந்துள்ளது.
குளோபல் எஜுகேஷன் அண்ட் கேரியர்ஸ் ஃபோரம் (Global education and careers forum ) என்ற நிறுவனம் இந்திய மாணவர்களுக்கான கல்வி ஆலோசனை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயில தேவையான ஆலோசனைகளை வழங்குகிறது. இதன் செயலாளராக இருப்பவர் லட்சுமி நாராயணன். இவர் எஜுகேஷன் மேட்டர்ஸ் (education matters) என்ற பெயரில் அமைப்பை நடத்தி அதன் மூலம் மாணவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குகிறார்.

இந்த துறையில் 26 ஆண்டு காலம் அனுபவம் கொண்டவர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள் வாயிலாக வெளிநாடுகளில் சென்று கல்வி பயில்வது, வேலை செய்வது உள்ளிட்டவற்றுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என கூறி வருகிறது. அந்த வகையில் அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ஆஸ்திரேலியாவில் வொர்க் லைஃப் பேலன்ஸ் எப்படி ஒழுக்கமாக பின்பற்றப்படுகிறது என்பதை விவரித்துள்ளார்.
காலை 9 மணி முதல் 5 மணி வரை வேலை நேரம் என்றால் 9 மணிக்கு முன்னரோ அல்லது 5 மணிக்கு பின்னரோ முதலாளி தொழிலாளியிடம் வேலை பற்றி பேசவோ அல்லது ஒரு எஸ்எம்எஸ் கூட அனுப்பவோ கூடாது என கூறுகிறார். அதே வேலை நேரம் முடிந்து கிளம்பும் போது ஊழியர்கள் முதலாளியிடம் கூறி விட்டு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என கூறியுள்ளார்.
வேலை நேரம் முடிந்த பின்னர் முதலாளியோ அல்லது நிறுவனமோ ஊழியரிடம் வேலையை பற்றி பேசினால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யும் வகையில் ஊழியர்களுக்கு சாதகமாகவே கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன என கூறுகிறார்.
ஆஸ்திரேலியா மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலும் வாரத்திற்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டும் வேலை செய்ய வேண்டும் மீத முள்ள நேரத்தை குடும்பத்திற்காகவும் சொந்த வாழ்க்கைக்காகவும் செலவிட அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் இந்தியாவிலோ இன்போசிஸ் நாராயணமூர்த்தி வாரத்திற்கு 80 மணி நேரத்திற்கு மேல் இளைஞர்கள் பணியாற்ற வேண்டும் என கூறுகிறார். எல்&டி தலைவர் சுப்பிரமணியனோ ஞாயிற்றுக்கிழமைகளில் கூட ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என கூறுகிறார்.
இந்திய பெரு முதலாளிகள் ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை , இந்தியாவில் உழைப்பு சுரண்டலுக்கு எதிராக சட்டம் இருந்தாலும் அதனை நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை என காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். பல்வேறு நாடுகளில் வொர்க் லைஃப் பேலன்ஸை கருத்தில் கொண்டு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற புதிய பாணியை அமல்படுத்தியுள்ளன.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications