உலக வங்கியானது இந்தியாவில் மூன்றும் மாபெரும் திட்டங்களுக்காக கிட்டதட்ட 4400 கோடி ரூபாயினை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதில் குஜராத், தமிழகம் என பிரித்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது என்ன திட்டம்? எதற்க்காக உலக வங்கி முதலீடு செய்கிறது? மற்ற கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
மூன்று கடன் திட்டங்களுக்கு ஒப்புதல்
குஜராத்தில் கல்வித் திட்டம், தமிழ் நாட்டின் சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் தொற்று நோய்க்கு பின் மீன் வளத் துறையில் மீட்புக்கு உதவவும் மொத்தம் 562 மில்லியன் டாலர் கடனாக(இன்றைய இந்திய மதிப்பு 4393.70 கோடி ரூபாயாகும்) மூன்று திட்டங்களுக்கு கொடுக்கவுள்ளதாகவும் உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
குஜராத்தில் எவ்வளவு?
குறிப்பாக உலக வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் குழு, குஜராத் மாநிலம் முழுவதும் உள்ள குழந்தைகளின் கல்வி முடிவுகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட திட்டத்திற்கு (GOAL) 250 மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது.
மீன் பிடித் துறை
உலக வங்கியின் இந்த அறிவிப்பின் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கூடுதலான 3000 பள்ளிகளுக்கு இது பயனளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு இந்தியாவின் மீன்பிடித் துறையை மீட்டெடுப்பதற்காக 150 மில்லியன் டாலர் நிதியுதவியையும் அறிவித்துள்ளது. இது இத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் துணை புரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் முதலீடு
சமூக பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான திட்டத்திற்கு 162 மில்லியன் டாலர் நிதியுதவியும் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழக அரசின் திறனை மேம்படுத்த பயன்படும் என எதிர்பர்க்கப்படுகிறது.
2020 - 21ம் ஆண்டில் மீன் வளத் துறை சுமார் 5.5 பில்லியான் டாலர் இழப்பினை கண்டது. கொரோனா தொற்று நோய் காரணமாக மீன் உற்பத்தி ஒரு வருடத்தில் கிட்டதட்ட 40% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சவால்கள்
இந்தியாவில் மீன் பிடித் துறையில் பெரிய அளவிலான தனியார் முதலீடுகள் குறைவாகவே உள்ளன. முக்கியமான நிதியளிப்பு அல்லது கடனுக்கான அணுகல் இல்லாமை மற்றும் இந்தத் துறையில் இள்ள சவால்களாக பார்க்கப்படுகிறது.
யாருக்கு பயன்
உலக வங்கியின் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 12 மில்லியன் மக்களை நேரடியாகவும், அதனுடன் தொடர்புடைய 13 மில்லியன் மக்கள் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளை மூலமாகவும் வேலை செய்வதாகவும் கூறியது.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications