சர்வதேச பொருளாதார உற்பத்தி விகிதமானது அடுத்த ஆண்டில், முதல் முறையாக 100 டிரில்லியன் டாலரை தாண்டி செல்லும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இது குறித்து பிரிட்டீஸ் கன்சல்டன்ஸி நிறுவனமான செபர் (Cebr) நிறுவனம் கணித்துள்ளது. இதில் சீனா 2030ல் உலக நாடுகளில் தலை சிறந்த பொருளாதார நாடாக உருவெடுக்கும் என கணித்துள்ளது. இது முன்னதாக 2028ல் சிறந்த பொருளாதார நாடாக உருவெடுக்கும் என கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல இந்தியா அடுத்த ஆண்டு பிரான்சையும், பின்னர் 2023ல் பிரிட்டனை முந்தி உலகின் ஆறாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என செப்ர் கூறியுள்ளார்.
பணவீக்கமே பெரிய பிரச்சனை
2020ல் உலக நாடுகளின் மிகப்பெரிய பிரச்சனையே பணவீக்கமாகவும், அதனை எப்படி உலக நாடுகள் சமாளிக்கின்றன என்பதுமாகத் தான் இருந்தது. இது அமெரிக்காவில் தற்போது 6.8% என்ற அளவினை எட்டிட்யுள்ளது. இதனை விரைவில் சரிய வேண்டும். அப்படி உலக நாடுகள் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், மேலும் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
பொருளாதார மந்த நிலை
இதனால் 2023 அல்லது 2024ல் உலக நாடுகள் தங்களை தாங்களே மந்த நிலைக்கு தயார்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கிடையில் 2033ம் ஆண்டில் ஜெர்மனி ஜப்பானினை முந்திச் செல்லலாம். 2036ம் ஆண்டில் ஜெர்மனி டாப் 10 நாடுகளில் ஒன்றாக மாறும். 2034ல் இந்தோனேசியா ஒன்பாதவது இடத்திற்கும் முன்னேறலாம் என கனித்துள்ளது.
ஓமிக்ரான் அச்சம்
மேற்கூறியவாறு பல கணிப்புகள் வெளியான வண்ணம் இருந்தாலும், உலக நாடுகள் பலவற்றிலும் ஓமிக்ரான் அச்சம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதன் காரணமாக மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
பொருளாதாரம் வளர்ச்சி
இதே எக்னாமிக் டைம்ஸில் வெளியானான செய்தியொன்றில் 2022 - 23ல் இந்திய பொருளாதாரம் கணிசமான வளர்ச்சியினை எட்டலாம். ஏற்கனவே கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்ட தொடங்கி விட்டது. ஆக நடப்பு நிதியாண்டில் மீதமிருக்கும் ஆண்டில் இன்னும் வளர்ச்சி காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டினை காட்டிலும் மூலதன் முதலீடுகள் கணிசமான் அளவு அதிகரித்துள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் முதலீடு அதிகரித்துள்ளது.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications