மதுபிரியர்கள் அனைவருக்கும் ஜானி வாக்கர் தெரிந்திருக்கும், ஆம் உலகில் பல கோடி மக்களால் விரும்பி அருந்தப்போடும் ஒரு ஸ்காட்ச் விஸ்கி பிராண்ட் தான் ஜானி வாக்கர். இந்தப் பிராண்டு-ன் சரக்கு எந்த அளவிற்குப் பிரபலமோ அதே அளவிற்கு இந்தப் பாட்டிலில் இருக்கும் தாத்தா புகைப்படம் உலகம் முழுவதும் பிரபலம்.
ஜானி வாக்கர் நிறுவனம் தற்போது உலகின் மிகப்பெரிய மதுபான விற்பனை நிறுவனமான டியாஜியோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிறுவனம் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க மிகப்பெரிய அளவிலான முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், 2021ஆம் ஆண்டுக்குள் 100 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாத மதுபான பாட்டில்களில் ஜானி வாக்கர் மதுபானம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டியாஜியோ தெரிவித்துள்ளது.
மர கூழ்
டியாஜியோ நிறுவனம் இந்தப் புதிய பேப்பர் பாட்டில்களைப் பைலெட் லைட் என்ற வென்சர் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும், இந்தப் பாட்டில்கள் உணவு தரத்திற்கு ஏற்றவாறு 100 சதவீதம் மறு சுழற்சி செய்யும் வடிவிலான பாட்டில்களை மர கூழ் மூலம் தயாரிக்கப்பட உள்ளதாக டியாஜியோ தெரிவித்துள்ளது.
Pulpex - புதிய நிறுவனம்
நீண்ட நாள் பயன்படுத்த கூடிய பேப்பர் பாட்டில் மற்றும் அதற்காக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள டியாஜியோ மற்றும் பைலெட் லைட் ஆகிய நிறுவனங்கள் Pulpex என்ற தனி நிறுவனத்தையே உருவாக்கியுள்ளது.
இந்த நிறுவனத்தின் டிசைன் மற்றும் தயாரிப்பில் தான் ஜானி வாக்கர் மதுபானம் பேப்பர் பாட்டிலில் வெளியாக உள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
Pulpex தயாரிக்கப்படும் பேப்பர் பாட்டில்கள் தான் யூனிலீவர் மற்றும் பெப்சிகோ ஆகிய நிறுவனங்களின் குளிர்பானங்கள் அடுத்த வருடம் வெளியாக உள்ளது. Pulpex நிறுவனம் டியாஜியோ நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல் சந்தையில் இருக்கும் பிற பிராண்டுகளுக்கும் பேப்பர் பாட்டில் தயாரித்து விற்பனை செய்ய உள்ளது.
பிளாஸ்டிக்
நுகர்வோர் நிறுவனங்கள் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உதாரணமாகப் பிளாஸ்ட் பயன்பாடு தடுப்பதில் முன்னோடியாக இருக்கும் ஐரோப்பாவில் 2018ஆம் ஆண்டில் மட்டும் உணவு மற்றும் குளிர்பானங்கள் மூலம் சுமார் 8.2 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா
வெளிநாட்டு நிறுவனங்களைப் போல இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களும் தங்களது தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும் இல்லையெனில் மிகப்பெரிய பிரச்சனைகளை இந்தியா எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.
ஜானி வாக்கர் தாத்தா
2018 பிப்ரவரி முன் வரையில் ஜானி வாக்கர் பாட்டிலில் ஆண் புகைப்படம் தான் இருந்தது. ஆனால் பெண் மதுப் பிரியர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஆண் ஜானி வாக்கர் புகைப்படம் பெண்ணாக மாற்றப்பட்டது.
ஜானி வாக்கர் பிராண்ட் விஸ்கி 1865ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டதால் ஜானி வாக்கர் லோகோவில் இருக்கும் மனிதரை தாத்தா எனக் குறிப்பிடுகிறோம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications