உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள், புகையிலை நிறுவனங்களின் வணிக நடைமுறைகள், புகையிலை பயன்பாட்டிற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு (WHO) உலக புகையிலை எதிர்ப்பு தினம் என்பதை அனுசரிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தங்களது எதிர்கால சந்ததியைப் பாதுகாக்க உலக சுகாதார அமைப்பால் உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது.

இதற்கு முக்கியமான காரணமும் உண்டு, உலக சுகாதார அமைப்பு கணக்கின் படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 லட்சம் பேர் புகையிலை பயன்பாட்டின் மூலம் மரணம் அடைகின்றனர். இதில் 12 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்தாமலேயே, புகையிலை பயன்படுத்தபவர்களால் இறக்கின்றனர். இந்த நிலையில் இந்திய புகையிலை சந்தை குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.
இந்தியப் புகையிலைத் துறை மிகப் பழமையானது மற்றும் நாட்டின் சிறந்த தொழில்களில் மிகவும் செழிப்பாக இருக்கும் ஒரு துறையாகவும் உள்ளது. இதனாலேயே இந்திய புகையிலை சார்ந்த முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் அதிகப்படியான லாபத்தையும் அளிக்கும் ஒரு முதலீட்டு துறையாகவும் இந்திய புகையிலை துறை உள்ளது.
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் புகையிலை தொழில் சார்ந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்து நிறுவனத்தின் வெற்றி, வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் இருந்து லாபம் பார்த்து வருகின்றனர். இந்திய புகையிலை பயன்பாட்டில் 90% க்கும் அதிகமானவை சிகரெட்டுகள் தான்.
இந்திய புகையிலை சந்தையில் சிகரெட்கள் முக்கிய இடத்தை கொண்டு இருக்கும் வேளையில் இத்துறையில் இருக்கும் டாப் நிறுவனங்கள் எது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1. ஐடிசி
2. காட்ஃப்ரே பிலிப்ஸ்
3. விஎஸ்டி இன்டஸ்ட்ரீஸ்
4. இந்திய வூட்ஸ் தயாரிப்புகள்
5. என்டிசி இண்டஸ்ட்ரீஸ்
6. கோல்டன் புகையிலை
இந்தியாவில் புகையிலை வர்த்தகம் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டது மட்டும் அல்லாமல் மத்திய மாநில அரசுகள் மக்கள் புகைபிடிப்பதைத் தடுக்க அதிகப்படியான வரிகளை உயர்த்துதல், விளம்பரங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங்கில் சுகாதார எச்சரிக்கைகள் உட்பட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனாலும் ஒவ்வொரு காலாண்டுக்கும் சிகரெட் வர்த்தகம் அதிகரித்து வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications