இந்தியா உள்பட உலகம் முழுவதும் அனல் மின்சாரம் மற்றும் அணு மின்சாரம் உற்பத்தி குறைந்து வரும் நிலையில் சூரிய மின்சார உற்பத்தியை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தற்போது சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையம் இந்தியாவில் அமைக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிதக்கும் சூரிய மின் நிலையம்
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காந்துவா என்ற பகுதியில் உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையம் அமைக்கப்பட இருப்பதாகவும் இந்த மின்சார நிலையத்தில் 2022- 23ஆம் ஆண்டில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
ரூ.3000 கோடி ஒதுக்கீடு
சுமார் 3,000 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக மதிப்பிடப்பட்டு உள்ளதாகவும் நர்மதா நர்மதை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஓம்காரேஷ்வர் அணையில் இந்த மிதக்கும் மின்சார நிலையம் அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
300 மெகாவாட் மின்சாரம்
இதுகுறித்து எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் சஞ்சய் துபே அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, ' உலகின் மிகப்பெரிய இந்த மிதக்கும் சூரிய மின் நிலையம் நர்மதா ஆற்றின் குறுக்கே உள்ள ஓம்காரேஷ்வர் அணையில் அமைக்கப்பட்டு வருகிறது என்றும், இதில் முதல்கட்டமாக முதலில் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன என்றும் தெரிவித்தார்.
டெண்டர்
2022-23 ஆம் ஆண்டுக்குள் 600 மெகாவாட் மின்சாரம் இந்த மின் நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் அதற்கான டெண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். என்றும் தெரிவித்தார்.
பெருமை
சூரிய மின் நிலையம் அமைக்க இந்த இடம் மிகவும் பொருத்தமான இடமாக இருப்பதாகவும் உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையம் அமைப்பதில் பெருமை கொள்கிறோம் என்றும் சஞ்சய் துபே மேலும் கூறினார்.
ஆண்டுக்கு 4000 மெகாவாட்
ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலத்தில் ஹைடல், தெர்மல் முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்றும், இதனையடுத்து சூரிய வெப்பம் முறையிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளதால் மொத்தமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்' என்றும் அவர் மேலும் கூறினார்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications