சென்னை-யில் தொழிற்சாலை அமைக்கும் foxlink.. டக்கரான நிறுவனம் தான்..!!

சென்னை: ஆப்பிள் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு சார்ஜிங் கேபிள்கள், பேட்டரி, கேமரா உள்ளிட்டவற்றை தயாரித்து வழங்கு வருகிறது ஃபாக்ஸ்லிங்க் (foxlink) நிறுவனம். இந்தியாவில் இந்நிறுவனம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஆலையை நிறுவி செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதால் தற்போது தமிழ்நாட்டில் ஆலையை நிறுவி வருகிறது.

ஃபாக்ஸ்லிங்க் நிறுவனம் சென்னை அடுத்த ஒரகடத்தில் புதிய ஆலையை நிறுவி வருவது எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரியவந்துள்ளது. தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்லிங்க் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான சார்ஜ் கேபிள்களை தயாரித்து வழங்கி வருகிறது.

சென்னை-யில் தொழிற்சாலை அமைக்கும் foxlink.. டக்கரான நிறுவனம் தான்..!!

இந்த நிறுவனம் சென்னைக்கு அருகே ஒரகடத்தில் தங்களுடைய ஆலையை விரிவாக்கம் செய்து வருகிறது. கூடிய விரைவில் இங்கே உற்பத்தியை தொடங்குவதற்கான பணிகளை ஃபாக்ஸ்லிங்க் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது என செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் ஃபாக்சிலிங்க் இந்தியா பிரசன்ஸ் என்ற பகுதியில் இந்தியாவில் அதன் உற்பத்தி ஆலை திருப்பதியில் இருப்பதாகவும், சென்னையில் ஆலை விரிவாக்க திட்டம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. நொய்டாவிலும் நிலத்தை கையகப்படுத்தி இருப்பதாக ஃபாக்ஸிலிங்க் நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் அமைந்திருந்த ஃபாக்ஸ்லிங்க் நிறுவன ஆலையில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

நல்வாய்ப்பாக இதில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. இங்கிருந்த 10 யூனிட்டுகளில் நான்கு யூனிட்டுகள் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்து விட்டன. இதனை அடுத்து திருப்பதியில் உள்ள ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவது பெரிய தலைவலியாக இருந்து வந்தது. எனவே தங்களது ஆலையை சென்னை ஒரகடத்திற்கு இந்த நிறுவனம் மாற்ற இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஃபாக்ஸ்லிங்க் நிறுவனம் பேட்டரிகள் மற்றும் சார்ஜிங் கேபிள்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. அதாவது செல்போன், கணினி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு தேவையான பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது .

2023 ஆண்டில் இதன் வருவாய் கிட்டத்தட்ட 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இந்த நிறுவனம் இந்தியா, அமெரிக்கா, மியான்மர் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் சுமார் 29 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.

இந்திய சந்தையை பிடிக்க வேண்டும் என்று நோக்கத்திலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் ஆதரவு காரணமாகவும் ஃபாக்ஸ்லிங்க் நிறுவனம் தற்போது இந்தியாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியில் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவில் உற்பத்தியை அதிகப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறது. எனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு தேவையான பாகங்களை தயாரித்து வழங்க கூடிய நிறுவனம் சென்னையில் ஆலையை நிறுவுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+