மியாமி, அமெரிக்கா: மூன்றாம் உலகப் போர் வெகு தொலைவில் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசி இருப்பது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் மியாமி நகரில் எதிர்கால முதலீடுகளுக்கான முயற்சி என்ற உச்சி மாநாட்டில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது மூன்றாம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை என குறிப்பிட்டார். இருந்தாலும் அது போன்ற ஒரு பேரழிவை தன்னுடைய தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதலை குறிப்பிட்டு டிரம்ப் இவ்வாறு பேசினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் மோதல்கள் மற்றும் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டுவது தன்னுடைய கடமை என டிரம்ப் குறிப்பிட்டார். அனைவரும் கொல்லப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை என கூறிய அவர், தற்போது நடைபெற்று வரும் போர்களை முடிவுக்கு கொண்டுவர நான் அவசரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் என்றார். பூமியை மீண்டும் அமைதி பாதைக்கு மீட்டெடுப்பது அவசியம் என டிரம்ப் குறிப்பிட்டார். இதற்கு முன்பு அமெரிக்க அதிபராக பதவி வகித்த ஜோ பைடனை சாடிய டிரம்ப், பைடனின் நிர்வாகமே உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் மோதல்கள் அதிகரிப்பதற்கு காரணம் என குற்றம் சாட்டினார்.
பைடன் அரசு இன்னும் ஓராண்டு காலம் பதவியில் இருந்திருந்தால் நிச்சயமாக மூன்றாம் உலகப் போர் வந்திருக்கும் என கூறிய டிரம்ப், இனி அதற்கு வாய்ப்பில்லை முட்டாள்தனமான மற்றும் முடிவுக்கு வராத போர்களை நிறுத்துவதே தன்னுடைய அரசின் இலக்கு என்றார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சு வார்த்தையை தொடங்கி வைத்திருக்கும் சவுதி அரேபியாவின் முயற்சி சமகாலத்தில் மிக முக்கியமானது என டிரம்ப் பாராட்டு தெரிவித்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ஒரு காமெடியன் என விமர்சனம் செய்த டிரம்ப், உக்ரைன் எனக்கு மிகவும் பிடித்த நாடு, ஆனால் ஒரு மோசமான நபரான ஜெலன்ஸ்கியின் கையில் சிக்கி அந்த நாடே அழிந்துவிட்டது என கூறினார்.
ஜெலன்ஸ்கி தேவையில்லாமல் லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு காரணமாகிவிட்டார் என சாடிய டிரம்ப் சண்டையில் இருக்கும் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினால் மட்டும்தான் இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் என குறிப்பிட்டார் . மேலும் உக்ரைன் போருக்கு ஆதரவு தெரிவித்து பைடன் நிர்வாகம் 350 பில்லியன் டாலர்களை செலவு செய்திருப்பதை விமர்சித்த டிரம்ப் இந்த போரை முடித்து ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் அமைதியை நிலைநாட்டுவேன் என்றார். விரைவில் போர் நிறுத்தம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என உறுதி அளித்தார்.
Story written by: Devika
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications