எவ்வளவு பழசானாலும் சில பொருட்களுக்கு மட்டும் எப்போதும் விலை உயரும், அப்படிப்பட்டது தான் விஸ்கி. மதுபானம் அருந்துவது தவறானது, ஆயினும் மதுபானத்திற்கு மிகப்பெரிய வர்த்தக சந்தை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் உள்ளது.
குறிப்பாக வெளிநாடுகளில் அரிய வகை மதுபானங்களுக்கு எப்போதும் அதிகப்படியான டிமாண்ட் இருந்து வருகிறது. இப்படி சமீபத்தில் லண்டனில் நடந்த பிரபல நிறுவனமான சோதேபி-யின் ஏலத்தில் ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் ஒன்று 2.2 மில்லியன் பவுண்டுகளுக்கு ($2.7 மில்லியன்) விற்பனையாகி வரலாறு படைத்துள்ளது.

சோதேபி எப்போதும் ஆடம்பரமான பொருட்களை ஏலத்தில் விடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளது. இதற்கு ஏற்றார் போல் சோதேபி பல பெரும் பணக்காரர்கள், அரிய பொருட்களை கலெக்ட் செய்பவர்கள் கான்டேக்ட்-ஐ வைத்துள்ளது.
இந்த நிலையில் விஸ்கி பிரியர்கள் மத்தியில் சோதேபி-யின் இந்த ஏலம் மிகவும் முக்கியமானதாக மாறியது. இதன் வாயிலாக உலகளவில் எப்போதும் இல்லாத வகையில் ஒரு மதுபான பாட்டில் சுமார் 22.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதுவரையில் ஒரு ஒயின் அல்லது மதுபான பாட்டில் இதுவரையில் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்பட்டது இல்லை.
உலகின் மிகவும் விலை உயர்ந்த விஸ்கி என்று அழைக்கப்படும் மக்கல்லன் அடாமி 1926 (Macallan Adami 1926) சோதேபி நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த விஸ்கி பாட்டிலுக்கு நேரில் மட்டும் அல்லாமல் தொலைபேசியிலும் அதிகப்படியான ஆர்டர்கள் வந்தது,
இந்த நிலையில் மக்கல்லன் அடாமி 1926 (Macallan Adami 1926) என்ற அரிய விஸ்கி 22.5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு உள்ளது. 1986 இல் வெறும் 40 பாட்டில்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த மக்கல்லன் அடாமி 1926 விஸ்கி, 60 வருடங்கள் செர்ரி பேரலில் பதப்படுத்தப்பட்டு உள்ளது.
மக்கல்லன் அடாமி 1926 போல் ஒரு விஸ்கி இல்லாதது தான் அதன் தனித்தன்மை, இது பெரும் பணக்காரர்கள் மத்தியில் தனி ஈர்ப்பை காட்டியுள்ளது. ஏலத்தில் விற்கப்பட்ட பாட்டில் இத்தாலிய கலைஞரான வலேரியோ அடாமி வடிவமைத்த லேபிளைக் கொண்டுள்ளது, இது இந்த தனித்துவமான லேபிளைக் கொண்ட பன்னிரண்டு பாட்டில்களில் ஒன்றாகும்.
ஏலத்தின் முடிவில் மக்கல்லன் அடாமி 1926 சுமார் 2,187,500 பவுண்ட்-களுக்கு விற்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications